பொதுத் தேர்வு நடக்கும் நாட்களில் தேர்வு மையம் அமைந்துள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பள்ளிகளில் படிக்கும்
மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை
நடக்கிறது.
அதில் பிளஸ்2 தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி 19ம் தேதி
முடிகிறது. பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 6ம் தேதி தொடங்கி 22ம் தேதியில்
முடிகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி
வரை நடக்கிறது.
மேற்கண்ட தேர்வுகளில் பத்தாம் வகுப்பு தேர்வில் மொழிப்பாடத் தேர்வுகள் காலையில் நடப்பதற்கு பதிலாக மதியம் நடக்கிறது.
பத்தாம் வகுப்பு தேர்வுக்காக 3740, பிளஸ் 1 தேர்வுக்கு 2912, பிளஸ் 2 தேர்வுக்கு 2941 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மேற்கண்ட தேர்வுகளுக்காக கூடுதலாக 700 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது.
இதையடுத்து மேலும், பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும் 14, 18,
20, 22 தேதிகளில் அந்த தேர்வு மையங்களில் படிக்கும் மற்ற வகுப்பு
மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை
அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...