Teachers Recruitment Board College Road, Chennai-600006
TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019 NOTIFICATION
| |
Dated: 28-02-2019 |
Chairman
|
சென்னை, ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' நுழைவு தேர்வை, ஆசிரியர் தேர்வு
வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.தமிழக பள்ளி கல்வித்துறை
கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல்,
எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியராக பணியாற்ற, 'டெட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி
பெற வேண்டும். முறைகேடுஒன்று முதல், ஐந்தாம் வகுப்புக்கு, டெட் முதல்
தாளும்; ஆறு முதல், எட்டாம் வகுப்புக்கு, இரண்டாம் தாளும் தேர்ச்சி பெற
வேண்டும்.கடைசியாக, டெட் நுழைவு தேர்வு, 2017 ஏப்ரலில் நடத்தப்பட்டது.
இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த தேர்வில் முறைகேடு
நடந்ததாக புகார் எழுந்தது. எனவே, 2018ல், தேர்வு நடத்துவது தள்ளி
போனது.ஆன்லைன் பதிவுஇந்நிலையில், இந்த ஆண்டு, டெட் தேர்வு அறிவிப்பு நேற்று
வெளியானது. தேர்வு விதிகள், பாடங்கள், 'ஆன்லைன்' பதிவு விபரங்கள்
வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், வரும்,
15ம் தேதி முதல், ஏப்., 5 வரை ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளலாம் என,
அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை, trb.tn.nic.in என்ற, இணையதளத்தில்
தெரிந்து கொள்ளலாம்.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர்
தகுதி தேர்வுக்கு 15-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல்
5-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
http://www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்துக்கு
சென்று விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள்
தாள்-1, பி.எட். முடித்தவர்கள் தாள்-2 என்ற தேர்வுகளை எழுதலாம். தேர்வு
நடைபெறும் நாள் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும். ஆசிரியர் தகுதி
தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ்
வழங்கப்பட்ட நாளில் இருந்து 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
இதுவரை ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றால்,
பள்ளியில் எடுத்த மதிப்பெண், தகுதித்தேர்வில் எடுத்த மதிப்பெண்
அடிப்படையில் காலிப்பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தது. ஆனால்
இனிமேல், ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றாலும், ஆசிரியர் தேர்வு
வாரியத்தால் அடுத்து நடத்தப்படும் போட்டி தேர்விலும் தேர்ச்சி பெற்றால்
மட்டுமே அரசு பள்ளிகளில் பணியில் சேரமுடியும். ஆனால் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழை கொண்டு
பணியில் சேரலாம்.