அரசு துறைகளில் காலியாக உள்ள, குரூப் - 1 பணிகளுக்கு, மார்ச், 3ல் முதல்நிலை தகுதி தேர்வு நடந்தது.
துணை கலெக்டர், டி.எஸ்.பி., - வணிக வரி கமிஷனர் உள்ளிட்ட பணிகளில், 181 காலியிடங்கள், இந்த தேர்வின் வழியே நிரப்பப்படுகின்றன.
இந்நிலையில், தேர்வுக்கான தோராய விடை குறிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
விடையில், மாற்றுக் கருத்து உள்ள தேர்வர்கள், வரும், 11ம்
தேதிக்குள், டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் தெரிவிக்கலாம் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.