சென்னை: அரசு ஊழியர்கள் 25 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிசுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருமணம்,பிறந்த நாள், வீடு குடிபுகுதல் உள்ளிட்ட
நிகழ்ச்சிகளின் போதும் அரசு ஊழியர்கள் தங்களின் உறவினர்கள் நண்பர்கள்
ஒருவரிடமிருந்து பரிசு பெறுவதற்கு விதிமுறைகள் உள்ளன .
அதன்படி ஏற்கனவே இது போன்ற நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்கள்
ரூ.5000 வரையே பரிசு பெறலாம் என்று இருந்தது. தற்போது 25 ஆயிரம் ரூபாய்
வரையிலான பரிசுப் பொருட்களை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதவிர அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கும் அல்லது புதிய
வீட்டை வாங்குவதற்கு உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் வட்டியில்லாமல் 5
லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம் எனவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது .
தமிழக அரசின் இந்த நடவடிக்கை வித்திடும் என்று சில நிபுணர்கள்
கருத்து தெரிவித்துள்ளனர் . அதேவேளையில் பரிசு பொருட்கள் பெறுவது குறித்து
யாரும் பெரிதாக கணக்கில் கொள்வதில்லை என்றும் சிலர் கருத்து
தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...