ஆதார் கார்டு தற்போது இந்திய நாட்டின் ஒரு முக்கிய அடையாளச்சான்றாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு அதற்கான முக்கியத்துவம் இந்தியாவில் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் கார்டினை பெற பயனாளர்கள் முன்பெல்லாம் அதற்க்காக இருக்கும் அலுவலகத்திற்கு சென்றே பெறவேண்டிய நிலை இருந்தது. அனால், அந்த கஷ்டத்தை நீக்க எளிய வழிமுறை வந்துவிட்டது. ஆன்லைன் மூலம் எளிமையாக ஆதார் கார்டினை பெற கீழ் வருவனவற்றை செய்தால் போதும்.
ஆதார் கார்டு வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் ஆதார் கார்டினை பெறும் விண்ணப்பத்தினை https://uidai.gov.in/images/aadhaar_enrolment_correction_form_version_2.1.pdf இந்த இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்யவும்.
பிறகு, அதில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் நிரப்பவும். அதன் பின்னர் அருகில் உள்ள ஆதார் பதிவு செய்யும் மையத்திற்கு சென்று அதனை ஒப்படைக்கவேண்டும். மேலும் அவர்கள் கேட்கும் அடையாள சான்றிதழ் மட்டும் அனைத்து விடயங்களையும் சரியாக கூறுங்கள். பிறகு அங்கேயே உங்களது கைரேகை மற்றும் கண் கருவிழி ஆகியவை ஸ்கேன் செய்யப்படும் .
அதன் பிறகு அந்த மையத்தில் 14 இலக்க பயோமெட்ரிக் நம்பர் ஒன்று உங்களுக்கு வழங்கப்படும். அந்த நம்பரை உபயோகித்து நீங்கள் ஆதார் கார்டு தயாரானதும் ஆன்லைன் மூலம் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...