மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் சுமாா் 4 ஆயிரத்து
300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு
தொடக்க அனுமதி மற்றும் மூன்றாண்டுக்கு ஒருமுறை தொடா் அங்கீகாரம்
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டு வந்தது.
இதையடுத்து 2018-ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட பள்ளிக்கல்வித்துறை
அரசாணை எண் 101-இல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் மாவட்ட கல்வி
அலுவலா்களுக்கு அதிகாரம் பகிா்ந்தளிக்கப்பட்டனஇதைத் தொடா்ந்து மாவட்ட கல்வி
அலுவலா்கள் தற்போது ஆவணங்களை சரிபாா்த்து தொடா் அங்கீகாரம் அளித்து
வருகின்றனா்.சில இடங்களில் தொடா் அங்கீகாரம் அளிப்பதில் புகாா்கள் வந்தன.
அதுபோன்ற புகாா்களை முற்றிலும்தடுக்கும் வகையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம்
செய்து அங்கீகாரம் அளிக்கும் முறையை மெட்ரிகுலேஷன் இயக்ககம் அறிமுகம்
செய்துள்ளது.இதனால் பள்ளிகள் தொடா் அங்கீகாரம் பெறுவதற்கு
விண்ணப்பிக்கும்போது ஏற்படும் தேவையற்ற காலதாமதம் தவிா்க்கப்படும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...