சென்னை: 'மாணவர்களின்
உடல் திறனை பாதிக்கும் வகையில், புத்தகப் பையின் எடையை அதிகரிக்கக் கூடாது'
என, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும்,
அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.அரசு மற்றும் அரசு உதவி மற்றும் தனியார்
பள்ளியிலும், தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம் மற்றும் சமச்சீர்
கல்வி சட்டம் அமலில் உள்ளது. இதன்படி, மாணவர் சேர்க்கை, பாட திட்ட
விதிமுறை, புத்தகங்கள் வாங்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேநேரம், பல பள்ளிகள், அரசு வழங்கும் புத்தகங்களை விட கூடுதலாக,
தனியாரிடம் பல புத்தகங்களை வாங்கி, மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகின்றன.
குறிப்பாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், இந்த செயலில் ஈடுபடுவதாக, பள்ளி கல்வி
துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.எனவே, அனைத்து, சி.பி.எஸ்.இ.,
மற்றும் மெட்ரிக் பள்ளிகளிலும், புத்தகப் பையின் எடையை, நீதிமன்ற
உத்தரவுப்படி பின்பற்ற, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக, இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. இதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல், 2ம் வகுப்பு வரை, 1.5 கிலோ; 3, 4ம் வகுப்புகளுக்கு, 2 கிலோ; 5ம் வகுப்புக்கு, 2.2 கிலோ; 6ம் வகுப்புக்கு, 3.25 கிலோ; 7ம் வகுப்புக்கு, 3.35 கிலோ மற்றும் எட்டாம் வகுப்பு, 3.75 கிலோ என, புத்தக பையின் எடை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2011ல் முப்பருவ தேர்வு மற்றும் பாடத் திட்ட முறை அமலாகும் முன், இந்த எடை அளவு, இரண்டு மடங்காக இருந்தது. தற்போது, புத்தக பையின் அளவு, பாதியாக குறைக்கப்பட்டது. 'உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பள்ளிகளுக்கான புத்தகப் பையின் எடை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை, பள்ளிகள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மாணவர்களின் உடல் திறனை பாதிக்கும் வகையில், அவர்களுக்கு சுமையை ஏற்படுத்த கூடாது' என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...