வாட்ஸ்அப் செயலி மூலம் அதிகப்படியான தகவல்களை (Bulk Messages) அனுப்புவோர்
மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம்
எச்சரித்துள்ளது.இன்றைய தொழில்நுட்ப உலகில், தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ்-அப் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 25கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
அதேசமயம், இச்செயலியின் மூலம் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களும் காட்டுத்தீ போல் வேகமாக பரப்பப்படுகிறது.
இந்த கட்டுப்பாட்டையும் மீறி, வாட்ஸ் -அப் வசதியை பயன்படுத்தி, அதிகப்படியான நபர்களுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்வோரின் வாட்ஸ் -அப் கணக்கை முடக்கியோ, நீக்கியோ அந்நிறுவனம் தற்போது நடவடிக்கை எடுக்க முடியும்.
வரும் டிசம்பர் 7 -ஆம் தேதி முதல் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது.








