அன்பார்ந்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளே தங்களை நம்பி களம் கண்டோம், சிறைச்சாலைசென்றோம், தண்டனை பெற்றோம்,சிறிது காலம் பள்ளிக்கு செல்லாமல் காவல் நிலையத்திற்கு"சென்று கையொப்பம் இட்டு வீட்டிலிருந்தோம்....பிறகு பள்ளிக்கு சென்று பணியில் சேர்ந்தோம்....இதனிடையில்"நாங்க சமூக விமர்சனங்களுக்கு ஆளாகி கடும்"மன உளைச்சளுக்கு தள்ளபட்டு இருந்தோம்....தயவு செய்து எங்கள் மன உளைச்சலை"குறையுங்கள்....தண்டனைகளை ரத்து செய்துவதற்கான வழிமுறைகளை கடைபிடியுங்கள்....நாமலும் இந்த அரசாங்கத்திடம் போராடி பார்த்தோம் ஒன்றும் பன்ன முடியுல...
நம் போராட்டத்தை பின்வாங்க வைத்தது இல்லாமல், தண்டனைகளை,பணியிடை நீக்கமும் பெற்றோம்....இப்படி இருக்கும் போது தயவு செய்து ஜாக்டோ ஜியோ மாநில மற்றும் உயர்மட்ட குழுவிற்கு ஒரு,அன்பான"வேண்டுகோள் இனிமேலும் போராட்டம்,மறியல், முற்றுகை என்று இல்லாமல் அரசாங்கத்திடம் நல்ல முறையில் அனுகி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழி முறைகளை பின்பற்றவும்....அரசாங்கம் நினைத்தால் மட்டுமே நம் தண்டனைகளை திரும்ப பெறுவதற்கும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் முடியும்....இனியும் போராட்டம்,மறியல் என்று சொன்னால் எரிகின்ற வீட்டில் எண்ணெய்ய ஊற்றுவதற்கு சமமாகும்....தயவு செய்து ஓய்வு பெற்ற அனைத்து சங்க நிர்வாகிகளுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்....தயவுசெய்து தங்களுக்கு பொழுது போகவில்லை என்றால் கோவில்,குளம் என்று செல்லுங்கள் அதைவிடுத்து ஆசிரியர்கள் ஆகிய எங்கள் வாழ்க்கையில் துன்பத்தை ஏற்படுத்திவிடாதீர்கள். பேட்டி தருவதாக சொல்லி கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக அவர்களை கோபப்படுத்தும் விதமாக பேசவது,அறிக்கை விடுவது எல்லாம் தயவுசெய்து எங்களுக்காக விட்டுவிடுங்கள்.உங்களுக்கு கோடி புண்ணியம்.இந்த அரசாங்கத்திடம் போராடி பெறமுடியாது என்று தெரிந்துவிட்டது... எனவே ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அமைதி காக்கவேண்டும்,தயவு செய்து ஓய்வு பெற்றவர்கள் எல்லாம் கொஞ்ச காலத்திற்கு சங்கத்திற்கு பக்கம் வரவேண்டாம்....தயவுசெய்து பணியில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் ஒன்று கூடி அரசாங்கத்திடம் நல்ல முறையில் பேசி சுமூகமாக பேசி எங்களின் தண்டனைகளை ரத்து செய்வதற்கான வழிமுறைகளை கடைபிடிக்கவும்.