இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு தகுதி இழக்கும் செய்யும்பொழுது நம்மால் தமிழக உயர்நீதிமன்றத்தில் என்ன செய்ய முடியுமோ...? அனைத்தையும் செய்தோம் ஆனால் அரசு தவறான உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கையை கூறி வழக்கை மிக சாதுரியமாக முடிந்து விட்டது அதற்கு அடுத்த கட்டமாக உச்ச நீதிமன்றம் சென்றிருந்தால் இரண்டு ஒரு வருடத்திற்கு தடுத்து விடலாம் என்று பலமுறை பதிவுகளை செய்திருந்தேம் ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட அப்போது வலி தெரியவில்லை தற்போது அங்கு சென்ற பின்பு எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் எங்களுக்கு கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளியுங்கள் என்று ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து தற்போது முன்வைக்கின்றனர்.ஒரு ஆபத்து வரப்போகின்றது என்பதை மாநிலத் தலைமை முன்கூட்டியே ஆராய்ந்து அதனை தடுப்பதற்கான வழிகளை வெளிப்படுத்துகிறது அப்போது அதனுடைய வலி தெரியாமல் விட்டுவிடுகிறோம் பின்னர் அதனை குறித்து நாம் வருத்தப்படுகிறோம். வருமுன் காப்பது மட்டுமே சாலச்சிறந்தது...!!
தற்போதைய சூழ்நிலையில் மத்திய &மாநில அரசு இன்னும் கல்வித்துறையில் மிக அதிகமான அளவு மாற்றத்தை கொண்டு வர இருக்கின்றது 80,000 இடைநிலை ஆசிரியர்களில் பாதி பேர்களுக்கு மேல் பணியிறக்கம் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது புதிய கல்விக் கொள்கையை குறிப்பிட்டுள்ள Pre KG,LKG,UKG முதல் இரண்டாம் வகுப்பு வரை ஒரு பிரிவாக பிரித்து அதில் இடைநிலை ஆசிரியர்களை பணியிறக்கம் செய்வதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என தெரியவருகிறது ஏதேனும் ஒரு காரணத்தை கூறி பணியிறக்கம் செய்வதற்கான பணிகள் இனிமேல் அதிகமாக நடக்கும்.
மூன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு கல்வி கற்பிக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
பணியிறக்கத்தினை தடுக்க உச்ச நீதிமன்றம் செல்வதற்கு சரியான சூழ்நிலை இருந்த போது அதனை நாம் தவறவிட்டுவிட்டோம், புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட்ட பின்பு நீதிமன்றமும் செல்ல முடியாது தற்போது அடுத்த ஆபத்து காத்திருக்கிறது எண்ணிக்கையில் குறைவாக உள்ள பள்ளிகளை நூலகங்களாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளது இது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஏழை குழந்தைகளும் மிகவும் பாதிக்கப்படுவர் இதுகுறித்த விழிப்புணர்வை தயவுகூர்ந்து ஆசிரியராகிய நாம் பெற்றோர்களிடமும் சமூக வலை தளங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்பபோது மட்டுமே அடுத்தபடியாக நெருங்கும் ஆபத்திலிருந்து இருந்து சிறிதளவாவது நம்மையும் நம் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் மீண்டும் ஆபத்தை உணராமல் இருந்து ஒருசில நாட்களையும் வீணாக கழித்துவிட்டால் அதன் பின்னர் ஒன்றும் செய்ய முடியாது ஆகவே ஆபத்து வருமுன் உணருவோம்...!! நம் தலைமுறையினை பாதுகாத்துக் கொள்வோம்...!!
இவண்
ஏழைகளும் நம் சமூகத்தில் ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் என நினைக்கும் பாமர ஆசிரியர்