கருமேகம்
மழையைப் பொழிந்து நிலத்தை வளமாக்குவதால்
மேகத்துக்கு எந்த பயனும் இல்லை.!
சூரியக்கதிரினால்
உணவுத்
தயாரிக்கும்
தாவரங்களால்
சூரியனுக்கு
எந்த பயனும் இல்லை..!
உயிருக்கு உயிராய்ப் பழகும்
நண்பர்களின் நட்புக்கு
எந்த நோக்கமும்..
எந்த குறிக்கோளும்
இல்லை..!
ஆனால்..
உண்மையான அன்பு
ஒன்று போதும்.!
இதே போல் தான்
பிறந்த குழந்தையும்..
பெற்ற தாயும்..
வைக்கும் அன்பினில் எந்த நோக்கமும் இல்லை..
வெறுமனே
அன்பு மட்டுமே போதும்.!
அதனால் தான் இறுதிவரை அன்பு வாழ்கிறது.!
எல்லா
நோக்கங்களும்
இப்படிப்பட்டவையே..
தேவையும்-நோக்கமும் நிறைவேறிய பின்னர் பற்றற்றும்..பயனற்றும் போய்விடும்..!
- ப.ஜார்ஜ்.M.Sc.D.T.Ed
23.07.2019