minister sengkottiyan interview
இந்நிலையில் தனியார் சேனலுக்கு இது குறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ் மொழி கிமு 300 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது என புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது தவறானது. பாடப்புத்தகத்தில் தமிழ் பற்றி தவறாக குறிப்பிட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். உலகிலேயே மூத்த மொழி தமிழ் என்பதில் மாற்று கருத்துக்கே இடமில்லை எனவே கண்டிப்பாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.
புத்தகங்கள் யாரால் வடிவமைக்கப்பட்டு யாருடைய உத்தரவுப்படி பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுவதில் ஆச்சர்யமில்லை...