நட்பதிகாரம்-சிலரை_நாம் நம்மை அறியாமலேயே அதிகம் நம்பி விடுகிறோம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


நட்பதிகாரம்-சிலரை_நாம் நம்மை அறியாமலேயே அதிகம் நம்பி விடுகிறோம்:

சிலரை_நாம் நம்மை அறியாமலேயே அதிகம் நம்பி விடுகிறோம். ஆனால் அவர்களோ மிக தெளிவான வரையறைக்குள்ளேயே நம்முடன் பழகுகிறார்கள்.

எல்லைகள் கொண்டமைந்த நட்பு மணல் சிற்பமாகும்.  நட்பின் வெளியில் நல்லெண்ணங்களும் நேசமும் நிறைந்திருப்பின் அதுவே வானத்தையும் கடந்த சூட்சும வெளியிலும் புகழோடு பயணிக்கும்.
தோழமைகளே, வழிகாட்டுதல் என்பது புதிய பாதைகளை கண்டறிய உதவும் செயல்முறை. நட்பில் நீங்கள் ஆழமான அன்போடு தோழமையை மதித்து நட்பை வெளிப்படுத்துவதை, தனக்கான கௌரவமாக, தன்னை உயர்நிலையிலும் நம்மை தாழ்மையாகவும் கண்டு அவர்கள் மீது  நாம் வைக்கக் கூடிய நல் நட்பினை ஒருபொருட்டாகவும் மதிக்காதவர்களை மீண்டும் சந்திக்காதீர்.

எத்தனை அக்கறை கொண்டு நாம் அவர்களை விசாரிப்பினும், அதனை நட்பாக எண்ணாது, கர்வமாக எண்ணி நம் நட்பினை சிறிதேனும் மதியாமல் நம்மை மீண்டும் மீண்டும் நல விசாரிப்புகள், அக்கறை மிக்க கேள்விகளை கேட்க செய்து நமக்கு உரிய பதில் அளிக்காத எவராயினும், அவர்கள் எந்த நாட்டிற்கு ராஜாவாக இருப்பினும் பரவாயில்லை அடியோடு விலகி விடுங்கள்.

நட்பென்பது பிச்சை அல்ல, கெஞ்சி கேட்பதற்கு. நட்பென்பது புரிதலில் மலர்ந்திடும் உன்னத மலர். ஆகையால் தான் நல்ல நட்பின் பார்வையில் சாதி மத பாலின மொழி உடற்குறைகள் நிறங்கள் ஏழை பணக்காரன் என்கிற பேதங்கள் கிடையாது. அது புரிதலுடன் மலர்ந்து வாழ்வு முழுதும் வாடாது மணம் வீசும் நிலைமாறா மலராகும்.

நீங்கள் பழகும் நண்பர் உங்களை ஒதுக்குவதாக நீங்கள் உணர்ந்தால் தயைகூர்ந்து அவர்களிடம் புரிந்து கொள்ள சொல்லி பேச சொல்லி கெஞ்சாதீர். அவர்களுக்கு விருப்பமின்றி தோழமையாக ஒப்புக்குப் பேசுவதைவிட நீங்கள் நட்பினை சுமந்து தனித்திருப்பது மேல்.

நற்றோழர்கள் நிலை வேறு அவர்கள் அக்கறையுடன் கோபிப்பவர்கள். நம் வாழ்வில் பிழை  வருமெனில் அதனை சரி செய்ய வழி காட்டுபவர்கள் அவர்கள். அவர்களிடம் நாம் என்றும் நட்பின் உரிமையோடு இருக்க முடியும். ஆனால் தோழமை கொண்ட பின் தான் என்கிற அகங்காரத்துடன் சிலர், பணமே பிரதானம் நட்பு பொழுதுபோக்கு என சிலர்,  நாம் கொண்ட நட்பினை அவர்கள் கர்வமாக கொண்டு பதில் அளிக்காது இருந்து பின்னர் பணியில் இருந்தேன், நேரமேயில்லை என சொல்பவர்கள் சிலர் இவர்களுக்கு சாப்பிட்டு உறங்க நேரமுண்டு ஆனால் ஒரு நிமிடம் நம் நட்பினை உணர்ந்து பேசி செல்ல எண்ணமோ நம்மைப் பற்றிய நினைவோ இருக்காது. நாம் அனுப்பிய செய்திகளைக் கண்டும் கூட அதனை ஒரு பொருட்டாக எண்ணாத தோழமைகள் இருப்பின், நீங்கள் அத்தோடு விடை பெறுங்கள் தூர சென்று விடுங்கள். அதுவே நட்பிற்கான மதிப்பைக் காக்கும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H