தகுதி தேர்வு வைத்தால் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் எப்படி எழுத முடியும்?
நுழைவு தேர்வு வைத்தால் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் எப்படி எழுத முடியும்?
நீட் தேர்வு வைத்தால் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் எப்படி எழுத முடியும்?
அந்த தேர்வு வைத்தால் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் எப்படி எழுத முடியும்?
இந்த தேர்வு வைத்தால் அரசு பள்ளி மாணவர்கள் எப்படி எழுத முடியும்?
டியர் போராளீஷ் எந்த தேர்வு வைத்தாலும் அரசு பள்ளி மாணவர்கள் எழுத முடியாத அளவுக்கு தான் அரசுபள்ளியின் தரம் இருக்குதுனு உங்களுக்கு தெரியுதுல. அப்போ அரசு பள்ளிகளின் பாடதிட்டத்தை CBSE க்கு இணையாக மாற்றுங்கள், அரசு பள்ளிகளின் தரத்தை கூட்டுங்கள் என்றல்லவா நீங்கள் போராட வேண்டும் அதுதானே உண்மையான தீர்வு. அதை விடுத்து எந்த தேர்வும் வேண்டாம் என்றால் அரசு பள்ளிகளின் தரம் கூடிவிடுமா? குறையத்தானே செய்யும். அல்லது நீட் ல் இருந்து விலக்கு பெற்று விட்டால் கிராமப்புற மாணவர்களுக்கு CBSE க்கு இணையான தரமான கல்விதான் கிடைத்துவிடுமா?
2018 தமிழக பட்ஜெட்டை எடுத்து பாருங்கள். பள்ளி கல்வி துறைக்கு நமது அரசாங்கம் 20,000 கோடிகளை செலவழித்துள்ளது (அதில் 70% ஆசிரியர்களின் சம்பளத்திற்கு மட்டுமே செல்கிறது). அதாவது ஒரு மாணவனுக்கு 35,000 ரூபாய். நிலைமை இப்படி இருந்தும் அரசாங்க பள்ளியின் தரம் ஏன் இப்படி இருக்கிறது என்று யாராவது கேட்டது உண்டா?. உடனே சிவன் எங்கு படித்தார் மயில்சாமி எங்கு படித்தார் என்று சில போராளிகள் கேட்டின் பூட்டை ஆட்டுவார்கள். ஆனால் அந்த போராளிகளின் குழந்தைகள் என்னவோ தனியார் பள்ளியில் தான் படிக்கும். விதிவிலக்குகள் உதாரணங்கள் ஆகிவிடாது. சிவன் மயில்சாமி போன்றவர்கள் தனி திறனால் தனது விதியை முறியடித்தவர்கள். அந்த திறமையை எல்லா குழந்தைகளிடமும் நாம் எதிர்பார்க்க முடியாது. தனியார் நிறுவனங்களின் நேர்முகத் தேர்வர்களிடம் கேட்டு பாருங்கள். கோர்வையாக 4 வாக்கியங்களை ஆங்கிலத்தில் பேச அரசு பள்ளியில் பயின்று வந்த மாணவர்கள் எப்படி தடுமாறுகிறார்கள் என்று?
CBSE, தனியார் பள்ளி மாணவர்களுக்கு விரைவாக கிடைக்கும் வாய்ப்பு, அரசு பள்ளி மாணவர்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை என்பதே உண்மை. அதனால்தான் கூலி வேலை செய்தாலும் தன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்திட பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக்கிறார்கள்.
எல்லாருக்கும் சமமான கல்வி கிடைக்கவில்லை என்று கூவுவதை நிறத்திவிட்டு., என் வரிப்பணம் இவ்வளவு செலவு செய்தும் தனியார் பள்ளிகளுக்கு சமமான கல்வியை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏன் கொடுக்க முடியவில்லை என்று போராடுங்கள் போராளிகளா..
அது தான் நீங்கள் முகநூலில் கூவும் சமமான கல்வியாக இருக்கும்.