நிகழ் நிதியாண்டில், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கு, 250 கி.மீ., நீளத்துக்கு ரூ.144.50 கோடியில் சுற்றுச்சுவர் மற்றும் வெள்ளத் தடுப்பு சுவர் கட்டப்படும்' என கடந்த ஜூலை 8-இல் சட்டப் பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவித்தார். அதன்படி இந்தப் பணியை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் முடிவு செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அதனை பரிசீலித்த தமிழக அரசு மத்திய அரசின் 75 சதவீத பங்களிப்புடன் ரூ.144.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
நிகழ் நிதியாண்டில், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கு, 250 கி.மீ., நீளத்துக்கு ரூ.144.50 கோடியில் சுற்றுச்சுவர் மற்றும் வெள்ளத் தடுப்பு சுவர் கட்டப்படும்' என கடந்த ஜூலை 8-இல் சட்டப் பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவித்தார். அதன்படி இந்தப் பணியை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் முடிவு செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அதனை பரிசீலித்த தமிழக அரசு மத்திய அரசின் 75 சதவீத பங்களிப்புடன் ரூ.144.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.








