செப்டம்பர் 5:
இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம் என்றால் இதற்காக தங்கள் உயிர்களை தானம் செய்தோர், பல ஆண்டு களாக சிறையில் வாடியோர், செக்கிழுத்தோர், தடியடிக்கு உள்ளானோர் என எண்ணிலடங்காதவர் பலர். அவர்கள் சிந்திய ரத்தத்தால், நாடு சுதந்திரம் பெற்றது.
செக்கிழுத்த செம்மல்
சுதேசி கொள்கையையே உயிர்மூச்சாக கொண்டதால் ஆங்கிலேயரால் செக்கிழுக்கும் கொடுமைக்கு ஆளான வ.உ.சிதம்பரம்பிள்ளைக்கு இதில் தனி இடமுண்டு.
இன்று, அவரது 148வது பிறந்த நாள். ஏழைகள், தொழிலாளர்களுக்காக கோர்ட்டில் வாதாடியதற்காகவும், சுதேசி கப்பல் விட்டதற்காகவும் ஆங்கிலேய அரசு இவரை சிறையிலடைத்து, மாடுகள் கட்டி இழுக்க வேண்டிய செக்கை இவரை வைத்து இழுத்து ஆத்திரத்தை தணித்து கொண்டதிலிருந்து, இவரது சுதந்திர வேட்கையை தெரிந்து கொள்ளலாம்.