வங்கி கணக்குகள்
வைத்துள்ள ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் வரும் 2020, ஜனவரி, 1ஆம் தேதிக்குள்,
கே.ஒய்.சி., எனப்படும், வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் படிவத்தை
புதுப்பிக்காவிட்டால், அந்த வங்கி கணக்கு முடக்கப்படும் என்றும்
அதன்பின்னர் அந்த கணக்கில் இருந்து, நேரடியாகவோ, 'ஆன்லைன்' மூலமோ,
பணப்பரிமாற்றம் செய்ய முடியாது என்றும் ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கிக்கணக்கு
வைத்துள்ளவர்கள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகள், எட்டு ஆண்டுகள் மற்றும் 10
ஆண்டுகளுக்கு ஒருமுறை, கே.ஒய்.சி., படிவத்தை புதுப்பிக்கப்பட வேண்டும்
என்றும், 'கே.ஒய்.சி., படிவத்தை புதுப்பிக்க, கணக்கு வைத்துள்ள வங்கி
கிளைக்கு சென்று, அங்கு தரப்படும் படிவத்தை பூர்த்தி செய்து, கேட்கப்படும்
ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சுய விபரக்குறிப்பில் மாற்றம்
எதுவும் இல்லாத வாடிக்கையாளர்கள், வங்கியின் இணைய தளத்தில்,
'கே.ஒய்.சி.,யில் மாற்றமில்லை' என்ற இணைப்பை, 'கிளிக்'செய்வதன் மூலம்,
புதுப்பிக்கும் பணியை செய்து கொள்ளலாம் என்றும் ஆர்பிஐ செய்திக்குறிப்பில்
குறிப்பிடப்பட்டுள்ளது
பணப் பரிமாற்ற
மோசடிகளை தவிர்க்கவும், வங்கி கணக்கு மூலம், பயங்கரவாத அமைப்புகளுக்கு பணப்
பரிமாற்றம் செய்யப்படுவதை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு
கருதியும், இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...