சமூகவலைத்தளம் :
சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ படுவேகமாக இந்தியா முழுவதும் பகிரப்பட்டு வருகிறது. ஒரு மாலில் உள்ள திரையரங்கு ஒன்றில் திரைப்படம் பார்க்க சென்ற ஒரு குழுவினருடன் மற்றொரு தரப்பினர் எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை திரையரங்குகளில் திரைப்படம் திரையிடுவதற்கு முன்பாக 1 நிமிடம் தேசிய கீதம் ஒளிபரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
ஆனால் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, தேசிய கீதத்திற்கு மதிப்பு அளிக்க முடியாது என கர்வத்துடன் இருக்கையில் அமர்ந்து இருக்கிறார்கள். அப்போது சில நேரங்களில் கைகலப்பும் நடந்துவிடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் திரையரங்கில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க முடியாது என்றும், நாங்கள் தேசிய கீதத்தை விரும்பவில்லை என்றும் ஒரு குழுவினர் திமிராக இருக்கையில் அமர்ந்தனர்.
அப்போது அங்கு இருந்த மற்றொரு தரப்பினர், இந்திய நாட்டில் பிறந்த உன்னால் நாட்டிற்காக தியாகம் செய்த மக்களுக்காக ஒரு நிமிடம் எழுந்து நிற்க முடியாதா? என்று கேள்வி எழுப்பியதுடன், அவர்களை திரையரங்கில் இருந்தே விரட்டி அடித்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழகத்தை சேர்ந்த பெரும்பான்மையான பெரியாரிஸ்ட்கள் இந்திய தேசிய கீதத்திற்கு மதிப்பு அளிக்காமல் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.