குழந்தைகளின் கிறுக்கல்களை படம் பிடித்தால் பாட்டுப் பாடும் புதிய செயலி
குழந்தைகளின் கிறுக்கல்களை படம் பிடித்தால் பாட்டுப் பாடும் புதிய செயலி. சென்னை புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ளது. பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள செயலி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. வீட்டின் சுவர்களில் குழந்தைகள் கிறுக்கும்போது, பெற்றோர்கள் அவர்களைக் கண்டிப்பது வழக்கமான ஒன்று. இவ்வாறு செய்வதால் இளம் பருவத்திலேயே குழந்தைகளின் கற்றல்திறன் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்த இங்மியோ செயலியின் மூலம், சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள மறுசுழற்சி காகிதத்தில் உள்ள ஓவியத்தை படம் பிடித்தால் அதற்கான பாடலை வீடியோவுடன் போனில் பார்க்க முடியும். வெறும் சுவற்றில் கிறுக்கும் குழந்தையுடன் வரையவும் விளையாடவும் பெற்றோர்களுக்கு இது உதவதாக அமைந்துள்ளது. பெரும்பாலான குழந்தைகள் வீட்டின் சுவர்களிலேயே முதலில் எழுதி பழகுகின்றன. சுவற்றில் கிறுக்குவதன் மூலம் கற்பிக்கும் முயற்சியாக உருவாக்கப்பட்டதே இங்மியோ. இந்த செயலி மூலம் பழங்களின் பெயர், விலங்குகளின் பெயர் உள்ளிட்ட 35 வகையான செயல்பட்டு கற்பித்தலை குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க முடியும் என்கிறார் இங்மியோ நிறுவனர் சதீஷ் குப்தா குழந்தையின் கற்றல் திறனை ஊக்கப்படுத்தும் கண்டுபிடிப்புகள் நிறைய வரவேண்டும் என்பதே பெற்றோர்களின் விருப்பமாக உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...