ஸ்மார்ட்போன் சாதனங்களில் கொரோனா வைரஸ்
எவ்வளவு காலம் உயிர் வாழும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய சாதனமாக ஸ்மார்ட்போன் மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் ஒருநாளில் பலமுறை நம் உடலில் தொடுகிறது. மேலும் ஸ்மார்ட்போன்களில் அதிக கிருமிகள் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு
எளிதில் பரவி வரும் நிலையில், ஸ்மார்ட்போன் மூலம் அது பரவும் அபாயமும்
அதிகமே. அந்த வகையில் ஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம்
உயிர்வாழும் என தெரியுமா?
உலக சுகாதார மையம்
சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், 2003 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட சார்ச்-கோவ்
வைரஸ் கிளாஸ் மீது 96 மணி நேரங்கள் அதாவது நான்கு நாட்களுக்கு உயிர்வாழும்
என கண்டறியப்பட்டது. கிளாஸ் தவி கடுமையான பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லெஸ்
ஸ்டீல் மீது 72 மணி நேரங்களுக்கு உயிர்வாழும் என கண்டறியப்பட்டது.
ஆரோக்கியத்திற்கான
தேசிய மையம் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தற்போதைய கொரோனா
வைரஸ் ஸ்டீல் மற்றும் கடுமையான பிளாஸ்டிக் மீது 72 மணி நேரங்கள் அதாவது
மூன்று நாட்களுக்கு உயிர்வாழும் என தெரியவந்துள்ளது. மேலும் கார்டுபோர்டின்
மீது 24 மணி நேரத்திற்கும், பித்தளையின் மீது 4 மணி நேரத்திற்கு
உயிர்வாழும் என தெரிவிக்கப்பச்சுள்ளது. சமீபத்திய ஆய்வில் கொரோனா வைரஸ்
கிளாஸ் மீது எவ்வளவு காலம் உயிர்வாழும் என கண்டறியப்படவில்லை.
எனினும்,
2003 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உலக சுகாதார மையம் மற்றும்
ஆரோக்கியத்துக்கான தேசிய அமைப்பு ஆய்வு முடவுகளின் படி கிளாஸ் மீது கொரோனா
வைரஸ் 96 மணி நேரம் அதாவது நான்கு நாட்களுக்கு உயிர்வாழும் என கருத
முடியும். ஆய்வின் படி ஸ்மார்ட்போன் மட்டுமின்றி அனைத்துவித கிளாஸ்
பரப்புக்கும் பொருந்தும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...