அது ஒரு திங்கள் கிழமை, ராஜேஷ் பிஸியாக வேலை செய்து கொண்டுயிருந்தான். 3 தடவை மனைவியிடம் இருந்து போன், 4வது தடவை எடுத்தான்.
எதுக்கு இப்ப இத்தினி வாட்டி அடிக்கிற...உனக்கு அறிவில்லை என்றான் எரிச்சாலாக.
மறுமுனையில் இருந்து ஒரு ஆண் குரல்..ராஜேஷ் சார்ர்ர்ர்
ஆமா நீங்க...?
சார்...நான் அசோக் நகர் மசுதி எதிர்தாப்பல இருந்து பேசுறேன்.
சிகப்பு கலர் சுகுட்டில வந்த மேடம் அடிபட்டுடாங்க சார்...உங்க wifeஆ சார்... என்று கேட்கும் போதே இவனுக்கு நெஞ்சு படபடத்தது.. மூளை சம்பித்தது.
ராஜேஷ்க்கு புரிஞ்சு போச்சு...
பையன் ஜவகர் வித்தாயலாயா ஸ்குலாதான் படிக்கிறான்.
ஐய்யோ ஆண்டவா..அவள மட்டும் திருப்பி கொடுத்துடு... அவகிட்ட பாசமா இருக்கேன்...இனிமேல் திட்ட மாட்டேன்..அன்பா இருப்பேன்....
ராஜேஷ்: இப்ப எங்க சார் அவங்க என்றான்.
அந்த ஆள்: பில்ரோத் கூட்டிட்டு போயிட்டு இருக்காங்க சார். என் கிட்ட போன் கொடுத்து ராஜேஷ் என்று மட்டும் தான் சொன்னாங்க. அப்புறம் மயங்கிடாங்க சார். கால்ல நல்ல அடி சார். நிறைய ரத்தம் வேற சார்... சீக்கரம் அங்கு வந்துடுங்க சார்.
தோ...உடனே வரேன் சார் என்று ஒடினான்.
கிழே வந்து காரை ஸ்டார்ட் பண்ணறதுகுள்ள மறுபடியும் போன் அவள் நம்பரில் இருந்து.
சார் சொல்லுங்க என்றான்...
ராஜேஷ் சார்..கொஞ்சம் காசு இருந்தால் அனுப்பி வையுங்க சார். மேடம்கிட்ட காசு இருக்கோ இல்லையோ... மேடம் வேற மயக்கத்தில் இருக்காங்க... அதனாலா treatment delay பண்ண கூடாது சார்.
எப்படி சார் பணம் அனுப்பறது...நான் கிளம்பிட்டேன் ஆபிஸ்லிருந்து. ஆன்லயனில் அனுப்புவதற்கு குறைந்தது அரை மணி நேரம் ஆகும் சார்..
சார் உங்களிடம் PAYTM / Gpay இருக்கா?
உங்க friends கிட்ட சொல்லி அனுப்ப சொல்லுங்க சார் நான் என் நம்பரை மெசேஜ் பண்ணுறேன் என்றான்.
சரி அனுப்புங்கு என்றான்.. அதுக்குள்ள நண்பனை கூப்பிட்டு விஷயத்தை விளக்கி பணம் அனுப்ப சொல்லிட்டான்.
பில்ரோத் ஆஸ்பிட்டல் பக்கத்தில் வந்துவிட்டது. ஆண்டாவா அவளுக்கு எதுவும் ஆக கூடாது. ஐய்யாயோ பையனுக்கு என்ன ஆனதுனு சொல்லாவே இல்லையே என்று புலம்பி கொண்டு உள்ளே ஒடினான்.
Reception: மேடம்...மேடம்..
பிரியானு ஒரு பேஷாண்ட் இப்பதான் அட்மிட் பண்ணியிருப்பாங்க.. ஆக்ஸிடேன்ட் கேஸ் மேம்... பிலிஸ் எங்க இருக்காங்க மேம்.
Reception lady: அப்படியாரும் வரல சார்... இன்னும் சொல்ல போனா.. ஆக்ஸிடன்ட் கேஸ் எதுவும் காலையிலிருந்து வரலியே சார்.
என்னடா இது..ஓரே குழப்பாமா இருக்கு என்று பிரியா நம்புருக்கு திருப்பி அடித்தேன்...
இரண்டாவது ரிங் அடிக்கறதுகுள்ளே.. சொல்லுங்க என்றாள்.
என்னடி சொல்லுறது...
எப்படி இருக்கே.. என்ன சொல்லுறாங்க டாக்டர்ஸ் என்றான்.
என்னங்க சொல்லுறீங்க ஒன்னும் புரியல. நான் வீட்டுலதான் இருக்கேன்...உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சா.. இப்ப எங்க இருக்கீங்க என்றாள்.
இருடி நான் திருப்பி கூப்பிடுகிறேன் என்று போனை கட் செய்தான்.
அப்புறம் ராஜேஷ் ஒடி போய் கட்டி புடிச்சு அழுது.... நடந்தது எல்லாம் சொல்லி... இப்ப முன்னை விட இப்ப நல்லா தான் இருக்காங்க.
இந்த கதையை ராஜேஷ் என்னிடம் சொல்லும் போது சம்பவம் நடந்து இரண்டு வாரம் இருக்கும்.
ராஜேஷ் என்னிடம் கேட்டது இரண்டு கேள்விதான்.
எப்படி என் மனைவி போன்லிருந்து என்னை கூப்பிட்டான். அவனுக்கு எப்படி என் மனைவி போற ரூட் தெரிந்தது..அதுவும் எனக்கு சந்தேகம் வராத மாதிரி பேசி பத்தாயிரம் ருபாய் என்னை வைத்தே அவன் கணக்குக்கு அனுப்ப வைத்தான் என்றான்.
நீங்கதான் அதற்கு பதில் சொல்லிடீங்களே ராஜேஷ்... உங்கள கொஞ்சம் நேரம் சிந்திக்க விடாம பண்ணி உங்கிட்ட காசு அடிச்சுடான்.
அவனுக்கு கண்டிப்பா உங்கள பற்றியும், உங்க குடும்பத்தை பற்றியும் தெரிந்து இருக்கு. மேலும் அவன் தான் செஞ்சு இருக்கனும் என்று அவசியம் இல்லை. நீங்கள சில சமயம் Facebook ல சொல்லிருக்கலாம்..status போட்டு இருக்கலாம்.
இயன்றவரை சமூக வலைதளைத்தில் எல்லாத்தையும் வாந்தி எடுக்கதீங்க.
ராஜேஷ்: அப்போ அந்த போன் கால்?
அது ரொம்ப சிம்பிள். Play store la நிறைய apps இருக்கு. Fake ID, Caller masking, Fake calls..அப்படி நிறைய.
உங்களுக்கு தெரியாம..உங்க மொபைல் நம்பரில் இருந்து கால் பேசவும் முடியும், மெசஜ்ம் அனுப்ப முடியும்.
இதில் என்னனா.. கால் தான் பண்ண முடியும், கால்ஸ் ரிசீவ் பண்ண முடியாது.
நீங்க உங்க மனைவிக்கு உடனே கால் பண்ணியிருந்த ஏமாந்து இருக்க மாட்டிங்க. ஆனால்...அவன் உங்களை சிந்திக்க விடாம..அவனே பேசியிருப்பான் என்றேன்.
ஆமா சார்...2 நிமிஷத்துக்கு ஒரு தடவை எங்க இருக்கிங்க..சீக்கரம் வாங்க...ஜாக்கிரதையா வாங்க என்று பேசிகிட்டே இருந்தான் சார் என்றார்.
இதில் நமக்கு பாடம் என்னானா...சிக்கலான சூழ்நிலையில் பதட்டம் ஆகாதீங்க, சமுக வலைதளைத்தில் எல்லாத்தையும் கொட்டாதீங்க, தெரியாடவர்களை நட்பு வட்டத்தில் சேர்க்காதீர்கள்....நிறைய சொல்லாம்... But நீங்களும் கொஞ்சம் யோசிங்க.
நீங்கள் கேட்கலாம், அந்த போன் நம்பரை போலீசில் கொடுத்தால், கண்டுபிடித்து கொடுக்க மாட்டார்களா என்று...பத்து ஆயிரம் ரூபாய்க்காக பத்து நாள் அலைய முடியுமா?
நம்ம ஊரில், சில்லறை வாங்காமல் காரியம் நடக்காது? பத்து ஆயிரம் திருட்டுக்கு எவுவளவு செலவு செய்வீர்கள்....இதை தான் அவர்கள் சாதகமாக பயன் படுத்தி கொள்கிறார்கள்...
பகிர்வு









