தமிழகத்தில் இன்று மேலும்
58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு
அடைந்தோர் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ்
சென்னை:
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 911 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 58 பேருக்கு
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர்
எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழகத்தின் தலைமை செயலர் சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில்
மேலும் 58 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 969 ஆக
அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்