
அரவிந்த் கெஜ்ரிவால்
புதுடெல்லி:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே, பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
அப்போது,
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது பற்றியும், ஊரடங்கு
கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும், அடுத்து
மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தார்.
இந்நிலையில்,
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதே சரியான
முடிவாக இருக்கும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்
தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கெஜ்ரிவால்
வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது என
பிரதமர் மோடி எடுத்துள்ள முடிவு சரியானதாக இருக்கும். வளர்ச்சி அடைந்த
நாடுகளுடன் இன்று இந்தியாவை ஒப்பிடுகையில் நாம் ஊரடங்கை முன்னரே
அறிவித்துள்ளோம்.
தற்போது ஊரடங்கை திரும்பப்
பெற்றால் நாம் எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணாகி விடும். எனவே, தற்போதைய
சூழலின் முக்கியத்துவத்தைக் கருதி ஊரடங்கை நீட்டிப்பதே சரியான முடிவாக
இருக்கும் என பதிவிட்டுள்ளார்.