சென்னை:
கொரோனா
வைரஸ் தொடர்பாக பீதியை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு
போலியான செய்திகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கோழி, முட்டை மற்றும் இறைச்சி
சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவும் என தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலம்
தகவல்கள் பகிரப்படுகிறது.
ஆனால் அசைவ உணவுகள்
சாப்பிடுவதால் கொரோனா பரவாது என தமிழக அரசு விளக்கம் அளித்தது. அதன்பிறகும்
கொரோனா தொடர்பான போலி செய்திகள் தொடர்ந்து உலா வருகின்றன. இதனால் இறைச்சி
விரும்பிகள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்க தமிழக அரசு மீண்டும் விளக்கம்
அளித்துள்ளது. கோழி, முட்டை மற்றும் இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது என
அரசு கூறி உள்ளது.
‘கோழி, முட்டை, குறித்து சமூக
ஊடகங்கள் மூலம் மக்களிடம் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இதுபோன்ற
வதந்திகளால் கோழி வளர்ப்பு தொழில் நலிவடைந்து பொருளாதார இழப்பு ஏற்படும்
சூழல் உருவாகி உள்ளது. தவறாக வழிநடத்தும் வதந்திகள் மூலம் நமது புரத
தேவையில் இழப்பு ஏற்படுகிறது. எனவே, தயக்கமில்லாமல் அனைவரும் கோழி, முட்டை
மற்றும் இறைச்சியை உட்கொள்ளலாம்’ என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...