தேன்கூடு தினம் ஒரு கதை
உள்மன ஆற்றல்
ஒரு விஞ்ஞானி.. அவர் பெயர் ஹோ.. ஒரு ஊசியை கண்டுபிடிக்க வேண்டும் என்பது அவர் நோக்கம்.. அதற்காக அவர் ரொம்ப காலம் ஆராய்ச்சி செய்தார்.. இருந்தாலும், அதை கண்டுபிடிப்பது அவருக்கு இயலாத காரியமாகவே இருந்து வந்தது.. அப்படி என்ன? அபூர்வமான ஊசி அது? வேறொன்றுமில்லை இன்றைக்கு தையல் இயந்திரங்களில் உபயோகப்படுத்துகிறார்கள் அல்லவா அந்த ஊசி தான்...
அதில் அவருக்கு நீண்ட காலமாக பிடிபடாமல் இருந்த ஒரு விஷயம், அந்த ஊசியின் கூர்மையான பாகத்தில் நூலை எப்படி கோர்ப்பது.. மற்றொரு பாகம் எந்திரத்தின் உள்ளே போய் விடுகிறது, எனவே அந்தப் பகுதியில் சாதாரண மற்ற ஊசியில் செய்வதுபோல நூலை நுழைக்க முடியாது.. அப்படியே நுழைத்தாலும் தைப்பது எப்படி சாத்தியமாகும்.. இதுதான் அவருக்கு இருந்த பிரச்சனை.. ரொம்ப நாள் யோசனை பண்ணிப்பார்த்தார்.. தையல் மிஷின் ஊசியின் வடிவமைப்பு அவருக்குப் புலப்படவில்லை.. இரவுபகலாக அதே ஞாபகமாக இருந்தார்.. அந்த சமயத்தில் ஒருநாள் அவர் தூங்கிக் கொண்டிருந்தார்.. அப்போது ஒரு கனவு கண்டார்.. அது என்ன கனவு தெரியுமா? அந்தக் கனவில் ஒரு மலை ஜாதியினர் அவரை பிடித்துக் கொண்டு போய்விடுகிறார்கள்.. அவரைக் கொண்டுபோய் ஒரு இடத்தில் கட்டிப் போட்டுவிடுகிறார்கள்.. அந்த மலைவாழ் மக்களின் தலைவன் ஒருவன் அங்கே வருகிறான்..உள்மன ஆற்றல்
ஒரு விஞ்ஞானி.. அவர் பெயர் ஹோ.. ஒரு ஊசியை கண்டுபிடிக்க வேண்டும் என்பது அவர் நோக்கம்.. அதற்காக அவர் ரொம்ப காலம் ஆராய்ச்சி செய்தார்.. இருந்தாலும், அதை கண்டுபிடிப்பது அவருக்கு இயலாத காரியமாகவே இருந்து வந்தது.. அப்படி என்ன? அபூர்வமான ஊசி அது? வேறொன்றுமில்லை இன்றைக்கு தையல் இயந்திரங்களில் உபயோகப்படுத்துகிறார்கள் அல்லவா அந்த ஊசி தான்...
இந்த நேரத்தில் மலை சாதியினர், அவரைச் சுற்றி.. சுற்றி.. வந்து பயங்கரமாக முறைத்துக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள்.. தன்னை சுற்றி ஆடிக் கொண்டு வருகிற அவர்களை மிகவும் அச்சத்தோடு கவனிக்கிறார்.. நேரம் ஆக, ஆக தன்னுடைய இறுதி நேரம் நெருங்குவதை உணர்கிறார்.. மிகவும் நெருக்கடியான நிலைமையில் தன்னைச்சுற்றி ஆடுகிற அவர்களை கவனிக்கிறார்.. அவர்கள் கைகளில் ஈட்டி மாதிரி ஒரு ஆயுதம் வைத்திருக்கிறார்கள்.. அந்த ஆயுதத்தை இவர் கண்ணுக்கு நேராக குத்துவதுபோல் கொண்டுவருகிறார்கள்.. அவர் அதைப் பார்க்கிறார் அந்த ஆயுதத்தின் கூரான முனையை இவர் கூர்ந்து கவனிக்கிறார்.. அந்தக் கூரான முனையில் ஒரு சின்ன துவாரம் தெரிகிறது உடனே அவருக்குள் பளிச்சென்று ஒரு ஐடியா உதயமாகிறது.. இதைத்தானே நான் இவ்வளவு காலமும் தேடிக்கொண்டிருந்தேன்.. கூரான முனையில் ஒரு சின்ன துவாரத்தை போட்டு விட்டால்.. அது மூலமா நூலைச் செலுத்தி, மறுமுனையை இயந்திரத்தில் வைத்து விடலாமே.. தையல் இயந்திரத்துக்கான ஊசி இதுதான் என்று நினைத்தார்.. திடீரென்று தூக்கம் கலைந்தது.. உடனே தன் தலைமாட்டில் இருந்த குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொண்டார்.. அதன் பிறகு அந்த ஊசியையும் அவர் தான் செய்து முடித்தார்.. இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம்..? ஆனால் இது சாத்தியம் தான்.. _விழித்துக் கொண்டிருக்கிற போது நமக்கு ஏற்படுகிற சில பிரச்சினைகளுக்கு கனவில் விடை கிடைப்பது உண்டு.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...