அரசு ஊழியர்கள் மீதுதான் அரசாங்கத்தின் முதல் தாக்குதல் எப்போதுமே இருக்கும். இதற்கு தற்போதைய மிகச் சிறந்த உதாரணம் மத்திய அரசு அறிவித்துள்ள ஜனவரி 2020 முதல் ஜூலை 2021 வரையிலான காலத்திற்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கிடையாது என்ற அறிவிப்பு.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்திலும் மிகப் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதும் இந்தியா அதற்கு விதி விலக்கல்ல என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. அதேசமயம் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் அறி வித்துள்ள ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவின் காரணமாக விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வருமானம் இன்றித் தவிக்கின்றனர். பல தொழிலாளர்கள் சம்பள வெட்டு, பகுதி வேலை இழப்பு போன்ற கொடுமைகளை சந்தித்து வருகின்றனர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையான சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றை மீட்டெடுக்கவும் கோடிக் கணக்கான தொழிலாளர்களின் வேலையைப் பாதுகாக்கவும் மத்திய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யானைப் பசிக்கு சோளப் பொரியைக் காட்டியதுபோல்தான் உள்ளது.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்திலும் மிகப் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதும் இந்தியா அதற்கு விதி விலக்கல்ல என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. அதேசமயம் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் அறி வித்துள்ள ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவின் காரணமாக விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வருமானம் இன்றித் தவிக்கின்றனர். பல தொழிலாளர்கள் சம்பள வெட்டு, பகுதி வேலை இழப்பு போன்ற கொடுமைகளை சந்தித்து வருகின்றனர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையான சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றை மீட்டெடுக்கவும் கோடிக் கணக்கான தொழிலாளர்களின் வேலையைப் பாதுகாக்கவும் மத்திய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யானைப் பசிக்கு சோளப் பொரியைக் காட்டியதுபோல்தான் உள்ளது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட, விவசாயிகளுக்கான ரூ.6000/-நிவாரணத் தொகையிலிருந்து ரூ.2,000/- வழங்கப்படும் என்ற அறிவிப்பும், தொழிலாளர் தங்கள் வருங்கால வைப்பு நிதியில் சேமித்து வைத்திருக்கும் தொகையில் 75 சதவீதம் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பும், வங்கிகளில் மாதாந்திரத் தவணைத் தொகை செலுத்துபவர்கள் தங்கள் தவணையை 3 மாதங்கள் கழித்து செலுத்தலாம் என்ற அறிவிப்பும், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி செய்பவர்களுக்கு தினக் கூலியில் ரூ.20/-ஐ உயர்த்திப் வழங்கப்படும் என்ற சலுகையும் அனைத்து சிறு, குறு ஏழை விவசாயிகளையும், தொழிலாளர்களையும், உழைப்பாளி மக்களையும் எந்தவகையிலும் காப்பாற்றி கரை சேர்க்காது.
பாவம், கார்ப்பரேட் கம்பெனிகளின் வாராக் கடனுக்காக ரிசர்வ் வங்கியிலிருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயைக் கொடுத்தது மத்திய அரசு. இல்லாவிட்டால் கார்ப்பரேட்டுகள் நடுத்தெருவுக்கு வந்திருப்பார்கள்.
“தற்போது இருக்கின்ற நாடாளுமன்றம் வேண்டாம், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு ரூ.20,000 கோடி ஒதுக்கினால் ஆடம்பரச் செலவு என்கிறார்கள். அப்புறம் எப்படித்தான் இந்தியாவை வல்லரசாக்குவது? தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு ரூ.1,00,000 கோடி ஒதுக்கினால் அதற்கு எதற்கு அவ்வளவு தொகை என்கிறார்கள். பிறகு எப்படி குடியுரிமை இல்லாதவர்களைக் கண்டுபிடிப்பது? குடியுரிமை இல்லாதவர்களை அடைத்து வைக்கும் முகாம்களை கட்டுவதற்கு ரூ.25000 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. அதையும் குறை சொல்கிறார்கள்." இதுதான் அரசின் சிந்தனையோட்டமாக இருக்கும் போலும்!
அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக் கணக்கான கோடி ரூபாய் வாராக் கடன்களை வசூல் செய்யாமலும், வருமான வரி ஏய்ப்பு செய்தோரிடமிருந்து வசூலாக வேண்டிய தொகையை இத்தகைய நேரங்களில்கூட வசூலிக்காமல் இருப்பதும், பேரிடர் காலங்களில் பயன்படுத்த வேண்டிய தற்செயல் நிதி, அவசர கால நிதி உள்ளிட்ட நிதிகளை மக்களுக்குப் பயன்படுத்தாமல் இருப்பதும், நாடாளுமன்றக் கட்டிடச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை இப்போதைய அவசரத் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டு புதிய நாடாளுமன்றம் கட்டுவதைத் தள்ளிப் போடாமல் இருப்பதும் ஏன்?
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில்லா விலையில் விற்கப்படும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலைகள் குறைக்கப்படாமல் தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதும், சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலை நடத்த அனுமதித்திருப்பதும், பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்காமல், ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் ஏழை எளிய உழைப்பாளி மக்களுக்கான உதவிகளையும், நிவாரணங்களையும் பிரதமர் இன்றுவரை அறிவிக்காமல் இருப்பதும் ஏன்?
நிதி திரட்ட மத்திய அரசுக்குப் பல வழிகள் உள்ளன. இந்தியாவில் 1000 கோடி ரூபாய்க்குமேல் சொத்துக்கள் வைத்துள்ள நபர்கள் சுமார் 1000 பேர் உள்ளனர். அவர்களிடம் ஒரே ஒரு முறை மட்டும் 2 சதவீத தொகையை கூடுதல் வரியாக வசூலித்தாலே அரசுக்கு ரூ.20000 கோடி கிடைத்துவிடும். அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொகையானது 18 மாதங்களுக்கும் சேர்த்து சுமார் ரூ.8000 கோடி மட்டும்தான்.
எனவே, அனைத்துத்துறை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளதை திரும்பப் பெற்று, அனைவரும் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை உத்வேகத்துடன் செய்ய ஊக்கப்படுத்திட வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
(த.நா.அரசு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம்)