அனுப்பி யதை தொடர்ந்து , தொழிலாளர்களின் வேலை நேரத்தை , 12 மணி நேரமாக உயர்த்தி வெளியி டப்பட்ட அரசாணையை , உத்தரபிரதேச அரசு திரும்பப் பெற்றது .
உத்தர பிரதேசத்தில் , முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான , பா.ஜ. , ஆட்சி நடக்கிறது . கொரோனா வைரசால் , மாநிலத்தின் பொருளாதா ரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது . இதற்கிடையே , வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க , மாநில அரசு , தொழிலாளர்கள் சட்டங் களில் , 38 திருத்தங்களை செய்துள்ளது .
இந்நிலையில் , இந்த அறிவிப்பை எதிர்த்து , அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் , ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது . இதை விசாரித்த நீதிமன்றம் , மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது . நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து , வேலை நேரத்தை , 12 மணி நேரமாக உயர்த்தி வெளியிடப்பட்ட அரசாணையை , மாநில அரசு திரும்பப் பெற்றது .








