பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறினார்.
நீட் தேர்வு பயிற்சி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வுக்கான பயிற்சிகள் ஜூன் மாதம் 2-ம் வாரத்தில் இருந்து தொடங்க
உள்ளது. 7 ஆயிரத்து 300 மாணவர்களுக்கு 9 கல்லூரிகளில் 35 நாட்களுக்கு
பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டு நீட் தேர்வில் 100 அரசு பள்ளி
மாணவர்களாவது வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரிக்கு செல்வார்கள் என்று
எதிர்பார்க்கிறோம்.
பள்ளிகள் திறப்பு குறித்து...
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேவையான
அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து
விரைவில் அறிவிக்கப்படும்.
கோபி பகுதியில் ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள்
தொடங்கப்பட்டு உள்ளது. ரூ.102 கோடி மதிப்பீட்டில் பவானி ஆற்றின் குறுக்கே 4
தடுப்பணைகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்திக்கடவு-அவினாசி திட்டம்
கொரோனா வைரஸ் தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்ட அத்திக்கடவு-அவினாசி
திட்டத்துக்கான முதல் கட்ட பணிகள் தற்போது மீண்டும் செயல்பட
தொடங்கியுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
அப்போது நிருபர்கள் அமைச்சரிடம்,
‘10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள்
அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்களா’? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர், ‘மதிப்பெண்கள் வந்த பிறகு அரசு அதை கூர்ந்து கவனித்து
நடவடிக்கை எடுக்கும்’ என்று பதில் அளித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...