5-ம் கட்ட ஊரடங்கை நோக்கி நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பொது முடக்கத்திற்கு மக்களின் நடவடிக்கை எப்படி இருக்கும்? அவர்கள் செய்யும் பணிகள் என்ன?.. என்பதை அறிவதற்காக நியூஸ் 18 செய்தி நிறுவனம் நாடு முழுவதும் 13 மொழிகளில் ஆன்லைன் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தியது. மே 21 முதல் 28ம் தேதி வரை இந்த கருத்துக்கணிப்பு நடைபெற்றது. நாடு முழுவதும் 50 ஆயிரம் பேர் பதிலளித்திருந்தனர். அவற்றில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன
விமானம், ரயில்களில் இனி எப்போது பயணிப்பீர்கள் என்ற கேள்விக்கு, இந்தாண்டு முழுவதுமே பயணிக்க மாட்டோம் என்று தமிழகத்தைச் சேர்ந்த 40 சதவீதத்தினர் கூறியிருக்கின்றனர்.
அதேபோல், இந்தாண்டு திரையரங்கிற்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு, 61 விழுக்காடு மக்கள் செல்லமாட்டோம் என்றும், 28 விழுக்காடு மக்கள் திரையரங்கிற்கு இனி எப்போதுமே செல்லமாட்டோம் எனவும் பதிலளித்துள்ளனர்.விமானம், ரயில்களில் இனி எப்போது பயணிப்பீர்கள் என்ற கேள்விக்கு, இந்தாண்டு முழுவதுமே பயணிக்க மாட்டோம் என்று தமிழகத்தைச் சேர்ந்த 40 சதவீதத்தினர் கூறியிருக்கின்றனர்.
பொது முடக்கத்திற்கு பின் ஓட்டல்களுக்கு செல்லும் ஆர்வம் குறையுமா என்ற வினாவிற்கு, 66 சதவீத மக்கள் ஆம் என்று பதில் கூறியுள்ளனர். மேலும், தங்களது உணவை தாங்களே சமைப்போம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். குஜராத்தில் மட்டுமே அதிகபட்சமாக 49 சதவீதம் பேர் ஓட்டலில் சாப்பிட விருப்பம் தெரிவித்துள்ளனர்
அதேபோன்று இனிமேல் பிறருடன் கைகுலுக்கி வரவேற்பதை அறவே தவிர்ப்போம் என்று 74 விழுக்காடு மக்கள் பளிச்சென்று பதிலளித்துள்ளனர்
பொது முடக்கத்திற்கு பின், அலுவலக விடுமுறைகளை குறைந்தளவு எடுப்பீர்களா என்ற வினாவிற்கு, நாடு முழுவதும் 47 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். ஆனால் சுவாரஸ்யமாக தமிழகத்தில் மட்டும் 52 சதவீதம் பேர் இல்லை என்றும், வழக்கம்போல் தான் விடுமுறை எடுப்போம் எனவும் பதிலளித்துள்ளனர்.
பார்ட்டி உள்ளிட்ட கொண்டாட்டங்களில் ஈடுபடும் ஆர்வம் உள்ளதா என்று கேள்விக்கு, தமிழகத்தில் மட்டுமே அதிகளவு ஆம் என்று பதில் கூறியுள்ளனர். நாடு முழுவதும் 67 சதவீதம் பேர் இந்தாண்டு பார்ட்டி கொண்டாட்டங்களை தவிர்க்க போவதாகக் குறிப்பிட்டுள்ளனர்
பொது முடக்கத்திற்கு பிறகும் வீட்டு வேலைகளை செய்வோம் என்று 78 விழுக்காடு மக்கள் நாடு முழுவதும் கூறியுள்ளனர். இல்லப்பணிகளில் கர்நாடகா மற்றும் ஒடிசா மாநில மக்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்
அதேபோல், ஊரடங்கிற்கு பிறகு, பொது போக்குவரத்தை பயன்படுத்தாமல், தனி வாகனத்திலேயே பயணிப்போம் என்று 66 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, 30 விழுக்காடு அளவுக்கு அரசு போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...