💫🌹ஆதிக்கம் யாரிடமிருக்கிறது என்பதல்ல;...
ஆதிக்க "வாதம்" இருப்பது தான் சிக்கலே...💫🌹
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
ஆண்மையும், பெண்மையும்
ஆணாதிக்கவாதி என அவர்களை மற்றவர்கள் நினைப்பார்கள்.
ஆனால் அவர்களோ காபி வைக்க கூட மனைவியை நம்பியிருப்பார்கள். தன் அன்றாட வேலையை தான் செய்துகொள்ள கூட தெரியாதவன் எப்படி ஆதிக்கவாதியாக இருப்பான்? ஆயுள் முழுக்க அவன் பெண்களை நம்பியே இருக்கிறான்.
பெரிய பதவி, அதிகாரங்களில் இருப்பார்கள்...ஏதோ ஒரு 20 வயதுப்பெண் போடும் செல்பிக்கு ஆர்ட்டின் விட்டுக்கொண்டு "குட்மார்னிங் டோலி" என அவர்களின் டைம்லைனில் தவமிருப்பார்கள்.
சும்மா செல்பி போட்டால் மூவாயிரம் ஆண்கள் லைக்ஸ் போடுகிறார்கள் என்றால் அத்தகைய ஆண்கள் எப்படி ஆணாதிக்கவாதிகளாக இருப்பார்கள்? ஆதிக்கம் முழுக்க பெண்ணின் கையில் அல்லவா போய்விடுகிறது?
பெண்களை நம்பி தன் வாழ்வை அமைத்துகொள்கையில் ஆண் தன் ஆதிக்கத்தை முற்றிலுமாக இழந்துவிடுகிறான். அவன் மன்னனாக இருந்தாலும் சரி...அந்தப்புரங்களில் ஆயிரம் பேரை வைத்திருந்த மன்னர்கள் தன் அதிகாரத்தை பெண்களிடம் இழந்ததையே பார்க்கிறோம். அதனால் வீழ்ந்த சாம்ராஜ்யங்கள் ஏராளம்.
பெண்கள் நம் வாழ்வின் உந்துசக்தியாக இருக்கலாம். ஆனால் அவர்களை அடைவதையே நோக்கமாக கொண்டு அதிகாரத்தையும், பதவியையும் தேடுபவர்கள் வீழ்ச்சியை சந்திக்கிறார்கள். அவர்களின் சாம்ராஜ்யங்களும் சரிகின்றன. அவர்களின் குடும்பங்கள் பெரும் இழப்பை சந்திக்கின்றன.
ஆக ஆணாதிக்கம் என சொல்லபடுவது முழுக்க அதிகாரத்தை பெண்களின் கையில் ஒப்படைக்கும் விசயமாகவே உள்ளது. இது போலியான ஆணாதிக்கம்.
உண்மையான ஆணாதிக்கம் என்றால் என்ன?
பலரும் நினைப்பதுபோல் ஆணாதிக்கம் தவறான விசயம் அல்ல. ஆண்-பெண் சமநிலை விரும்பதக்கதும் அல்ல.
ஆணும், பெண்ணும் சமம் என்றால் என்ன ஆகும்?
உடலளவில் ஒரு ஆணும், உடலளவில் ஒரு பெண்ணும் அந்த வீட்டில் இருந்தாலும் மனதளவில் அந்த வீட்டில் அவர்கள் இருவரும் இரு பெண்களாக இருப்பார்கள் அல்லது இரு ஆண்களாக இருப்பார்கள். அதன்பின் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் போய்விடும்.
பெண் விடுதலை என சொல்லபடும் விசயங்களை ஆராய்ந்தால் எனக்கு தோன்றுவது இதுதான்.
"நான் நானாக இருக்க எனக்கு சுதந்திரம் வேண்டும்" எனதான் பெரும்பாலான பெண்கள் கேட்பதாக படுகிறது.
பெண் தன் இயல்பில், தன் தேர்வுகளில் சுதந்திரமாக இருக்க அனுமதிப்பதுதான் பெண்ணியம்.
அப்படி சுதந்திரம் பெற்ற பெண்கள் தன் இயல்புக்கு ஒப்பான பெண்மையையே தேர்ந்தெடுக்கிறார்கள்.
பெண்மை தன் இயல்பில் இருப்பதே அதன் சுதந்திரமும், விடுதலையும் ஆகும்.
அது அப்படி நடக்கவேண்டுமெனில், ஆண் தன் ஆண்மை எனும் இயல்பில் இருக்கவேண்டும்.
அப்படிப்பட்ட ஆண்மையே பெண்மையை ஈர்க்கும்
தன் இயல்பில் இருக்கும் பெண்மையே ஆண்மையை ஈர்க்கும்.
இதற்கு ஆண்-பெண் இடைவெளியை கூராக்க வேண்டுமே ஒழிய மழுங்கடித்து சமநிலைக்கு கொண்டுவரக்கூடாது.
பெண்ணை சார்ந்திராமல் தன் இயல்பில் தன்னை சார்ந்து நிற்கும் ஆணிடமே பெண்மை தன்னை ஒப்படைக்கும்.
ஆண்மை எனும் ஆலமரத்தில் தன் கூடு இருக்கும் மகிழ்ச்சியில் அது தன் சிறகை வீசி சுதந்திரமாக பறக்கும்.
வலுவான தந்தையர், வலுவான ஆண்கள்..இவர்கள் துணையுடனே பெண்மை தான் விரும்பும் உயரங்களை அடையமுடியும்.
வலுவற்ற ஆண்கள் வலுவற்ற குடும்பங்களையே உருவாக்குவார்கள்...வலுவான ஆண்கள் வலுவான சமூகத்தை உருவாக்குவார்கள். அதில் ஆண்-பெண் குழந்தைகள் இருவரும் தம் இயல்புக்கு ஏற்ற வாழ்வை அடைவார்கள்.
ஆண்மை அதன் இயல்பிலும், பெண்மை அதன் இயல்பிலும் இருக்க அனுமதிக்கும் சமூகங்களிலேயே உண்மையான சமத்துவம் நிலவ இயலும்.
வாழ்வினிது
சிந்தித்துசெயலாற்றுங்கள்
ஆதிக்க "வாதம்" இருப்பது தான் சிக்கலே...💫🌹
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
ஆண்மையும், பெண்மையும்
ஆணாதிக்கவாதி என அவர்களை மற்றவர்கள் நினைப்பார்கள்.
ஆனால் அவர்களோ காபி வைக்க கூட மனைவியை நம்பியிருப்பார்கள். தன் அன்றாட வேலையை தான் செய்துகொள்ள கூட தெரியாதவன் எப்படி ஆதிக்கவாதியாக இருப்பான்? ஆயுள் முழுக்க அவன் பெண்களை நம்பியே இருக்கிறான்.
பெரிய பதவி, அதிகாரங்களில் இருப்பார்கள்...ஏதோ ஒரு 20 வயதுப்பெண் போடும் செல்பிக்கு ஆர்ட்டின் விட்டுக்கொண்டு "குட்மார்னிங் டோலி" என அவர்களின் டைம்லைனில் தவமிருப்பார்கள்.
சும்மா செல்பி போட்டால் மூவாயிரம் ஆண்கள் லைக்ஸ் போடுகிறார்கள் என்றால் அத்தகைய ஆண்கள் எப்படி ஆணாதிக்கவாதிகளாக இருப்பார்கள்? ஆதிக்கம் முழுக்க பெண்ணின் கையில் அல்லவா போய்விடுகிறது?
பெண்களை நம்பி தன் வாழ்வை அமைத்துகொள்கையில் ஆண் தன் ஆதிக்கத்தை முற்றிலுமாக இழந்துவிடுகிறான். அவன் மன்னனாக இருந்தாலும் சரி...அந்தப்புரங்களில் ஆயிரம் பேரை வைத்திருந்த மன்னர்கள் தன் அதிகாரத்தை பெண்களிடம் இழந்ததையே பார்க்கிறோம். அதனால் வீழ்ந்த சாம்ராஜ்யங்கள் ஏராளம்.
பெண்கள் நம் வாழ்வின் உந்துசக்தியாக இருக்கலாம். ஆனால் அவர்களை அடைவதையே நோக்கமாக கொண்டு அதிகாரத்தையும், பதவியையும் தேடுபவர்கள் வீழ்ச்சியை சந்திக்கிறார்கள். அவர்களின் சாம்ராஜ்யங்களும் சரிகின்றன. அவர்களின் குடும்பங்கள் பெரும் இழப்பை சந்திக்கின்றன.
ஆக ஆணாதிக்கம் என சொல்லபடுவது முழுக்க அதிகாரத்தை பெண்களின் கையில் ஒப்படைக்கும் விசயமாகவே உள்ளது. இது போலியான ஆணாதிக்கம்.
உண்மையான ஆணாதிக்கம் என்றால் என்ன?
பலரும் நினைப்பதுபோல் ஆணாதிக்கம் தவறான விசயம் அல்ல. ஆண்-பெண் சமநிலை விரும்பதக்கதும் அல்ல.
ஆணும், பெண்ணும் சமம் என்றால் என்ன ஆகும்?
உடலளவில் ஒரு ஆணும், உடலளவில் ஒரு பெண்ணும் அந்த வீட்டில் இருந்தாலும் மனதளவில் அந்த வீட்டில் அவர்கள் இருவரும் இரு பெண்களாக இருப்பார்கள் அல்லது இரு ஆண்களாக இருப்பார்கள். அதன்பின் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் போய்விடும்.
பெண் விடுதலை என சொல்லபடும் விசயங்களை ஆராய்ந்தால் எனக்கு தோன்றுவது இதுதான்.
"நான் நானாக இருக்க எனக்கு சுதந்திரம் வேண்டும்" எனதான் பெரும்பாலான பெண்கள் கேட்பதாக படுகிறது.
பெண் தன் இயல்பில், தன் தேர்வுகளில் சுதந்திரமாக இருக்க அனுமதிப்பதுதான் பெண்ணியம்.
அப்படி சுதந்திரம் பெற்ற பெண்கள் தன் இயல்புக்கு ஒப்பான பெண்மையையே தேர்ந்தெடுக்கிறார்கள்.
பெண்மை தன் இயல்பில் இருப்பதே அதன் சுதந்திரமும், விடுதலையும் ஆகும்.
அது அப்படி நடக்கவேண்டுமெனில், ஆண் தன் ஆண்மை எனும் இயல்பில் இருக்கவேண்டும்.
அப்படிப்பட்ட ஆண்மையே பெண்மையை ஈர்க்கும்
தன் இயல்பில் இருக்கும் பெண்மையே ஆண்மையை ஈர்க்கும்.
இதற்கு ஆண்-பெண் இடைவெளியை கூராக்க வேண்டுமே ஒழிய மழுங்கடித்து சமநிலைக்கு கொண்டுவரக்கூடாது.
பெண்ணை சார்ந்திராமல் தன் இயல்பில் தன்னை சார்ந்து நிற்கும் ஆணிடமே பெண்மை தன்னை ஒப்படைக்கும்.
ஆண்மை எனும் ஆலமரத்தில் தன் கூடு இருக்கும் மகிழ்ச்சியில் அது தன் சிறகை வீசி சுதந்திரமாக பறக்கும்.
வலுவான தந்தையர், வலுவான ஆண்கள்..இவர்கள் துணையுடனே பெண்மை தான் விரும்பும் உயரங்களை அடையமுடியும்.
வலுவற்ற ஆண்கள் வலுவற்ற குடும்பங்களையே உருவாக்குவார்கள்...வலுவான ஆண்கள் வலுவான சமூகத்தை உருவாக்குவார்கள். அதில் ஆண்-பெண் குழந்தைகள் இருவரும் தம் இயல்புக்கு ஏற்ற வாழ்வை அடைவார்கள்.
ஆண்மை அதன் இயல்பிலும், பெண்மை அதன் இயல்பிலும் இருக்க அனுமதிக்கும் சமூகங்களிலேயே உண்மையான சமத்துவம் நிலவ இயலும்.
வாழ்வினிது
சிந்தித்துசெயலாற்றுங்கள்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...