தேசிய
ஓய்வூதிய திட்டத்தில் மாற்றங்கள் செய்யக் கோரிய மத்திய, மாநில அரசு
ஊழியர்கள் கூட்டமைப்பின் பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகம் நிராகரித்தது.
நிதி ரீதியாக இது ஏற்கக் கூடியதல்ல என பதிலளித்துள்ளது. தேசிய ஓய்வூதிய
திட்டம் கடந்த 2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, அனைத்து மத்திய, மாநில
அரசு ஊழியர்களுக்கும் கட்டாயமாக்கப் பட்டது. இந்த திட்டம் பழைய ஓய்வூதிய
திட்டத்தை போல நிலையான ஓய்வூதிய தொகையை வழங்கவில்லை என சில அரசு ஊழியர்கள்
சங்கத்தினர் எதிர்த்து வருகின்றனர்.
இதற்கிடையே, பழைய ஓய்வூதிய திட்டத்திற்கான தேசிய இயக்கத்தின் டெல்லி பிரிவு
தலைவர் மன்ஜீத் சிங், பிரதமர் அலுவலகத்திற்கு மனு ஒன்றை
அளித்திருந்தார்.அதில், ‘பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர
வேண்டும், தற்போதைய திட்டத்தில் பெரும்பாலான நிதி பங்குச் சந்தையில்
முதலீடு செய்யப்படுகிறது.
இதுவே பழைய ஓய்வூதிய திட்டம் எனில், கொரோனா மீட்பு பணிகளுக்கு அரசு
அப்பணத்தை பயன்படுத்த உதவியாக இருக்கும்’ என கூறி உள்ளார். இதற்கு மத்திய
நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்து பதிலளித்துள்ளது. அதில்,
‘பங்குச்சந்தையுடன் தேசிய ஓய்வூதிய திட்டம் இணைக்கப்பட்டிருந்தாலும், அதன்
முதலீடுகள் விவேகமான முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், உகந்த வருவாயை
அது உறுதி செய்யும். மேலும், மனுதாரரின் கோரிக்கை நிதி ரீதியாக நியாயமானது
அல்ல. ஏனெனில், மிகப்பெரிய தொகையை திரும்பப் பெறுவது, சந்தைகளில் பேரழிவு
தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும். மிகவும் மோசமான நிதி தாக்கங்களையும்
ஏற்படுத்தும்,’ என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...