உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதையும் சிதைத்துக்கொண்டிருக்கிறது
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் மருத்துவ வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இதுவரையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான கண்டுபிடித்துள்ள கோவேக்சின் என்றழைக்கப்படும் இந்த மருந்தை சென்னை எஸ்.ஆர். எம் மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் உள்ள 12 மருத்துவமனைகளில் சோதனை செய்ய ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியது.இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று ஐ.சி.எம்.ஆர் அறிவித்திருந்தது. உடனடியாக தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது ஆபத்து என்று மருத்துவ வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.
படிக்க: கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று கஜகஸ்தானில் பரவுகிறது - சீனா விடுத்த எச்சரிக்கைபடிக்க: காற்றின் மூலம் கொரோனா தொற்று: அதிகம் பரவுவது எப்போது? - உலக சுகாதார அமைப்பு விளக்கம்.. பீதியில் மக்கள்..
இதனை அடுத்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின், இசட்ஒய்கோவ்-டி ஆகிய இரண்டைச் சேர்ந்த 140-ல் 11 தடுப்பு மருந்துகள் மனித சோதனைக்கு வந்துள்ளது. இதில், எந்த தடுப்பு மருந்தும் 2021-ம் ஆண்டுக்கு முன்னதாக பொதுமக்கள் பயன்பாட்டுவராது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இன்று ஆஜராக அதிகாரிகள் அடுத்த ஆண்டுக்கு முன்னதாக கொரோனா மருந்து தயாராகாது என்று விளக்கம் அளித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் மருத்துவ வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இதுவரையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான கண்டுபிடித்துள்ள கோவேக்சின் என்றழைக்கப்படும் இந்த மருந்தை சென்னை எஸ்.ஆர். எம் மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் உள்ள 12 மருத்துவமனைகளில் சோதனை செய்ய ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியது.இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று ஐ.சி.எம்.ஆர் அறிவித்திருந்தது. உடனடியாக தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது ஆபத்து என்று மருத்துவ வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.
படிக்க: கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று கஜகஸ்தானில் பரவுகிறது - சீனா விடுத்த எச்சரிக்கைபடிக்க: காற்றின் மூலம் கொரோனா தொற்று: அதிகம் பரவுவது எப்போது? - உலக சுகாதார அமைப்பு விளக்கம்.. பீதியில் மக்கள்..
இதனை அடுத்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின், இசட்ஒய்கோவ்-டி ஆகிய இரண்டைச் சேர்ந்த 140-ல் 11 தடுப்பு மருந்துகள் மனித சோதனைக்கு வந்துள்ளது. இதில், எந்த தடுப்பு மருந்தும் 2021-ம் ஆண்டுக்கு முன்னதாக பொதுமக்கள் பயன்பாட்டுவராது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இன்று ஆஜராக அதிகாரிகள் அடுத்த ஆண்டுக்கு முன்னதாக கொரோனா மருந்து தயாராகாது என்று விளக்கம் அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...