சென்னை : தமிழக பள்ளிக் கல்வித் துறையின், 'வீடியோ' பாடங்களை,
மாணவர்களின் இலவச, 'லேப்டாப்'பில் பதிவு செய்து தர, பள்ளிக் கல்வித் துறை
ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, வரும், 31 வரை பள்ளி, கல்லுாரிகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 'பள்ளிகளை எப்போது திறப்பது என்பதை, இப்போது சிந்திக்க முடியாது' என, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், வீட்டில் உள்ள மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகள், 'ஆன்லைனில்' பாடம் நடத்துகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'டிவி' வழியே பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் கல்வி, 'டிவி' மற்றும் தனியார் சேனல்களில், பாடங்கள் நடத்தப்பட உள்ளன.
அரசு கேபிள், 'டிவி' மற்றும், தமிழ்நாடு
கேபிள் கார்பரேஷன் நிறுவனம் ஆகியவற்றின் இணைப்பில், 200ம் எண்ணில், அரசின்
கல்வி, 'டிவி'யில் பாடம் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், பள்ளிக் கல்வித்
துறை தயாரித்துள்ள கல்வி, 'டிவி'யின் வீடியோ பாடங்களை, பிளஸ் 2
மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பில் பதிவு செய்து தர, அதிகாரிகள் ஏற்பாடு
செய்துள்ளனர்.'பென் டிரைவ்' வழியாக பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு
வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக, வரும், 31 வரை பள்ளி, கல்லுாரிகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 'பள்ளிகளை எப்போது திறப்பது என்பதை, இப்போது சிந்திக்க முடியாது' என, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், வீட்டில் உள்ள மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகள், 'ஆன்லைனில்' பாடம் நடத்துகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'டிவி' வழியே பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் கல்வி, 'டிவி' மற்றும் தனியார் சேனல்களில், பாடங்கள் நடத்தப்பட உள்ளன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...