தமிழகத்தில் இன்றைய
கொரோனா நிலவரம் குறித்த தகவல்..சுகாதாரத் துறை..
CLICK HERE TO DOWNLOAD
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில்
இன்று ஒரே நாளில் மேலும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது.CLICK HERE TO DOWNLOAD
சென்னையில் இன்று 1,168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
77,338 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று
68 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,966 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில்
இன்று 3,617 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,532 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது
46,969 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை
தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று சென்னையை
தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...