தமிழகத் தில் கொரோனாவைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்தமார்ச் மாதம் முதல்
அனைத்து பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டன. 10 , 11 ம் வகுப்பு பொதுத்தேர்வும்
ரத்து செய்யப்பட்டு , மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றதாகவும்
பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கொரோனா பாதிப்பினை தடுக்க அரசு பல்வேறு
நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறப்பது
குறித்து உயர்மட்ட குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.
இதில் , கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கட்டுக்குள் வந்ததும் , பள்ளிகள்
திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும்போது ,
வகுப்பறைக்கு 20 மாணவ - மாணவிகள் மட்டும் சமூக இடைவெளியை கடைபிடித்து
அமரவைத்து வகுப்புகள் நடத்துவது , மீதமுள்ள மாணவர்களை தனித்தனி குழுவாக
பிரித்து , காலை , மதியம் என வகுப்புகள் நடத்தலாமா ? அல்லது மாணவ
மாணவிகளுக்கு மூன்று நாள் ஒருமுறை சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவைத்து
பாடங்கள் நடத்தலாமா ? என்பது போன்ற ஆலோசனை செய்யப் பட்டு வருகிறது . மேலும்
, பள்ளிகளில் எவ்வாறு கொரோனா பாதுகாப்பு வழிமுறை களை ஆசிரியர்களும் ,
மாணவர்களும் கடைபிடிப்பது போன்றவைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு
வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...