
உயர்ந்த பண்பு எது?
🕉️🚩🕉️🚩🕉️🚩🕉️🚩
மற்றவன் குணம் எப்படி இருக்கிறது என்று ஆராய்வதை விட உன் குணம் எப்படி இருக்கிறது என்று பார். அதுவே உயர்ந்த பண்பு.
தேங்காய் உடைத்ததும் வெண்மையான பருப்பு தெரியும். மனதை சுத்தமாக வைத்துக் கொள் என்பதே தேங்காய் உடைப்பதின் தத்துவம்.
குளிக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான்; தண்ணீருக்கல்ல. அது போல் கடவுளை நினைக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான்; கடவுளுக்கல்ல.
எந்த வேளையும் கடவுளை நினைக்க வேண்டும். காலையில் எழும்போது, உணவு உண்ணும் போது, இரவு துாங்கும்போதாவது அவசியம் நினைக்க வேண்டும்.
ஒரு விதை பலவாக பெருகுவது போல, நல்வினையோ, தீவினையோ நம்மிடம் ஒன்றுக்கு பலவாக வந்து சேரும். அதனால் நாம் செய்யும் செயல்கள் துாயனவாக அமைவது நல்லது.
நாம் கடவுளின் சன்னதியில் (உலகம்) தான் வாழ்கிறோம். அதனால், நல்ல சிந்தனை, சொல், செயல் என்று நம்மை இறைவனோடு மட்டுமே தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும்.
கடவுள் கண்ணுக்கு தெரியவில்லை. அதனால் கடவுள் இல்லை என்று கூறினால்; உயிரும் கண்ணுக்கு தெரியவில்லை. அதனால் உயிர், உடலில் இல்லை என்று ஆகிவிடுமா?
வாரியார் சுவாமிகள்