இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் கல்வி நிறுவனங்கள் முழுவதும் திறக்கப்பட முடியாத நிலையில் உள்ளது. மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தேர்வுகள் எதுவும் நடத்தப்பட முடியாத சூழல் உள்ளது. தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். ஆனால், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை. தேர்வுகள் நடத்தப்படுவதில் குழப்பம் நீடித்துவருகிறது.
இந்தநிலையில், கர்நாடகாவில் இளங்கலை, முதுகலை, பாலிடெக்னிக், பொறியியல் ஆகிய படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்குத் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை. அவர்களுக்கு செப்டம்பர் மாதம் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல, செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21-ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ, பொறியியல், வேளாண் பொது நுழைவுத்தேர்வு ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும். கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை ஆகஸ்டில் தொடங்கும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
முன்னதாக, டெல்லியிலும் கல்லூரி மாணவர்களுக்கானத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...