கிருஷ்ணகிரி : -'இயங்காத பள்ளி வாகனங்களுக்கு, வரி கேட்பதை தமிழக அரசு
நிறுத்த வேண்டும்' என, பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து, ஆர்ப்பாட்டம்
செய்தனர்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேஷன், மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி., பள்ளி அசோசியேஷன் சார்பில், நேற்று, கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின், மாநில பொதுச்செயலர் நந்தகுமார் கூறியதாவது: தமிழகம் முழுதும், 50 ஆயிரம் பள்ளி வாகனங்களில், ஒரு லட்சம் பேர் வேலை செய்கின்றனர். ஊரடங்கால், பள்ளி வாகனங்கள் இயங்காமல் இவர்கள் வாழ்தாரத்தை இழந்துள்ளனர். பள்ளி வாகனங்களுக்கு சாலை வரி, இருக்கை கட்டணம், இன்சூரன்ஸ், எப்.சி., ஆகியவற்றை கட்ட வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
எப்போது பள்ளிகள் திறக்கும் என்று
தெரியாமல், மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க முடியாமல் உள்ளதால், தனியார்
பள்ளி நிர்வாகிகள் தற்கொலை செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு, செப்டம்பர் வரை வரி கட்ட விலக்கு அளித்துள்ளது. ஆனால், மாநில
அரசு, வரியை கட்ட வேண்டும் என, வலியுறுத்தி வருவது வேதனை அளிக்கிறது.
இயங்காத பள்ளி வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை, தமிழக அரசு நிறுத்த
வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேஷன், மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி., பள்ளி அசோசியேஷன் சார்பில், நேற்று, கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின், மாநில பொதுச்செயலர் நந்தகுமார் கூறியதாவது: தமிழகம் முழுதும், 50 ஆயிரம் பள்ளி வாகனங்களில், ஒரு லட்சம் பேர் வேலை செய்கின்றனர். ஊரடங்கால், பள்ளி வாகனங்கள் இயங்காமல் இவர்கள் வாழ்தாரத்தை இழந்துள்ளனர். பள்ளி வாகனங்களுக்கு சாலை வரி, இருக்கை கட்டணம், இன்சூரன்ஸ், எப்.சி., ஆகியவற்றை கட்ட வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.