கொரோனா ஊரடங்கு காரணமாக, 2020-21ஆம் கல்வியாண்டு இன்னும் தொடங்கப்படவே இல்லை. மார்ச் 23ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் விடுமுறை இன்னும் தொடர்வதால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி இந்திய அளவில் பெற்றோர்கள் மனத்தில் அலைபாயும் கேள்வியாக உருவெடுத்துள்ளது. அதேநேரம் குழந்தைகளின் பாதுகாப்பும் முக்கியம் என்ற பதற்றமும் பெற்றோர்களிடத்தில் இருக்கிறது. ஆன்லைன் கல்வியிலும் மாணவர்கள் முழுமையான முறையில் சேரவில்லை என்பதே டிஜிட்டல் இந்தியாவின் நிதர்சன நிலை.
இந்தப் பின்னணியில் கடந்த ஜூலை 15ஆம் தேதி ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து மாநிலங்களுடனும் பள்ளிகள் திறப்புத் தேதி குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறது. அதில் பல மாநிலங்களும் பல கருத்துகளைச் சொல்லியிருக்கின்றன. இந்தக் கருத்துகளை அமைச்சகம் ஓர் ஆவணமாகத் தொகுத்து இன்று (ஜூலை 20) மத்திய அரசிடம் ஒப்படைக்க உள்ளது.
அந்த ஆவணங்களில் மாநிலங்கள் என்ன சொல்லியுள்ளன?
நாட்டிலுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அதிகபட்சம் 36 மாநிலங்கள் பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை, எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது என்று குறிப்பிட்டுள்ளன. 5 மாநிலங்கள் இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் தேவை என கூறியுள்ளன. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுகளை கொண்டுள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இப்போதைக்குப் பள்ளிக்கூடங்கள் திறப்பது பற்றி எந்த ஆயத்தமும் இல்லை என்று தெளிவாகக் கூறியிருக்கின்றன. டெல்லி மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளைத் திறக்க முன்னுரிமை அளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே... ஜூலை இறுதியில் பள்ளிகளைத் திறக்கத் தயாராக இருக்கிறோம் என்று சொன்ன ஒரே மாநிலம் அசாம் மட்டுமே
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...