ஒருவர் ஒரு கடைக்கு வருகிறார், கடை காரரிடம் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கி கொண்டு 1000 ரூபாய் நோட்டை தருகிறார்.
கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்குகிறார் கடைகாரர்.
திரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில் வைத்து கொண்டு மீதி 800 ரூபாயை பொருள் வாங்கியவரிடம் கொடுத்துவிட்டார்.
சிறிது நேரம் கழித்து பக்கத்து கடை காரர் வந்து இந்த 1000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று சொல்லி குடுத்து விட்டு 1000 ரூபாய் வாங்கி செல்கிறார்.
இப்போ இந்த கடை காரருக்கு எவ்வளவு நஷ்டம் ?
வாங்கிய பொருள் 200+ அவருக்குத் தந்த செல்லும் நோட்டு 800+ செல்லாமல் கடைக்காரரிடம் உள்ள 1000 = ரூபாய் 2000 நட்டம்.
அதுவுமன்றி தற்போது 1000 ரூபாய் நோட்டைப் பயன்படுத்தினால் அது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் கூடுதலாக சிறைதண்டனையும் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.