காமராசர் முதல்வராக இருந்தபோது ஒரு நாள் அவரை சந்திப்பதற்காக ஏற்கனவே முன் அனுமதி (Appointment) பெற்ற தொழிலதிபர்கள் மாலை நேரம் வந்து காத்திருந்தனர்.
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் காமராசரை சந்திக்க வெளியூரில் இருந்து பொதுமக்கள் வந்துவிடுகிறார்கள்.
முதலமைச்சருக்கு இரண்டு தகவலும் வருகிறது. வெளியூரில் இருந்து வந்தவர்களுக்கு கடைசி பேருந்து எத்தனை மணிக்கு என்று கேட்கிறார். 8.30 மணிக்கு என்றதும் முதலில் அவர்களைச் சந்திக்கிறார். அவர்களோடு பேசி முடித்து அனுப்பிவிட்டு, தனது உதவியாளரை அழைத்து ஏற்கனவே முன் அனுமதி பெற்ற முதலாளிகளை வரச் சொல்கிறார்.
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் காமராசரை சந்திக்க வெளியூரில் இருந்து பொதுமக்கள் வந்துவிடுகிறார்கள்.
முதலமைச்சருக்கு இரண்டு தகவலும் வருகிறது. வெளியூரில் இருந்து வந்தவர்களுக்கு கடைசி பேருந்து எத்தனை மணிக்கு என்று கேட்கிறார். 8.30 மணிக்கு என்றதும் முதலில் அவர்களைச் சந்திக்கிறார். அவர்களோடு பேசி முடித்து அனுப்பிவிட்டு, தனது உதவியாளரை அழைத்து ஏற்கனவே முன் அனுமதி பெற்ற முதலாளிகளை வரச் சொல்கிறார்.
வந்த முதலாளிகளின் கண்களில் முன்அனுமதி பெற்று வந்திருந்தும் தங்களைக் காக்க வைத்துவிட்டு சாதாரண பொதுமக்களை சந்தித்த
வருத்தம் தெரிகிறது.
அதனை கவனித்த காமராசர் அவர்களையும் காயப்படுத்த விரும்பாமல் இப்படி சொல்கிறார்...
பொதுமக்கள் சொந்த ஊர் போவதற்கு கடைசி பஸ் இரவு 8.30 மணிக்கு, அதை தவற விட்டால் காலை வரை பேருந்து நிலையத்திலோ ரோட்டோரமாகவோ தான் தூங்க வேண்டும், அதிலும் காலை உணவிற்கு காசு இருக்கிறதோ இல்லையோ அதனால் தான் முதலில் அவர்களைப் பார்த்து அனுப்பினேன். நீங்கள்
எப்போது வேண்டுமானாலும் போகலாம் கார் வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கிறார்.
அது மட்டுமல்ல அதற்குப் பிறகு சொன்ன வார்த்தை தான்.
ஆழமானது;
அர்த்தம் மிகுந்தது.
“நீங்கள்,
நான் முதலமைச்சர் ஆனதால் பார்க்க வந்திருக்கிறீர்கள்.
அவர்கள்,
என்னை முதலமைச்சர் ஆக்கிவிட்டு பார்க்க வந்திருக்கிறார்கள்”
உண்மையை
உணர்ந்தவர்.
அதனால் தான்
காலம் முழுவதும்
நன்றியோடு தமிழகம்
அவரை
நினைவில் வைத்துப்
போற்றுகிறது.