தேவையானவை :
கருஞ்சீரகம்- 1 டீஸ்பூன்
சீரகம்- 1 டீஸ்பூன்
தேன்- 1 டீஸ்பூன்
தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை :
ஒரு சிறு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை விட்டு அதனை சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
பின் கொதிக்க வைத்த அந்த நீரை வடிகட்டி அதனுடன் 1 டீஸ்பூன் தேனை சேர்த்து தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்பு குடித்து வந்தால் உடல் எடையில் மாற்றம் ஏற்படும்.
மேலும் இந்த நீரை புற்று நோய் உள்ளவர்கள் காலையும், மாலையும் இதனை பருகினால் புற்று நோயில் இருந்து விரைவாக குணமடையலாம்.
பயன்கள் :
கருஞ்சீரகத்தில் தைமோகியோனின் என்ற வேதிப்பொருள் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
இதில் உடலுக்கு நன்மை தர கூடிய கொழுப்பு அதிகம் உள்ளதால் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகின்றது.
கருஞ்சீரகத்தில் இன்டெர்பிதான் என்ற இயற்கை வேதிப்பொருள் எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி புற்று நோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது.
பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும் இதற்கு கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது.
பிரசவத்திற்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.









