காலை சிற்றுண்டியும் அவசியம்-புதிய கல்விக்கொள்கை! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Monday 3 August 2020

காலை சிற்றுண்டியும் அவசியம்-புதிய கல்விக்கொள்கை!

gallerye_073324722_2588126
புதிய கல்வி கொள்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், முக்கியமான அம்சமாக, மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமும் உள்ளது. அதாவது, குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாகவும், ஆக்கபூர்வமாகச் சிந்திக்கவும், கல்வி கற்கவும், மதிய உணவு மட்டுமன்றி, காலை சிற்றுண்டியும் அவசியம் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதிய கல்வி கொள்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

* நாடு முழுவதும் 11.59 கோடி அரசு பள்ளி மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். 16 லட்சம் சமையலர்கள், உதவியாளர்களும் இதன் மூலமாக வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.

* குழந்தைகள் சத்துக் குறைபாட்டுடன் இருந்தால் அல்லது நல்ல உடல்நிலையில் இல்லாவிட்டால் அவர்களால் முழுமையாக கல்வி கற்க முடியாது. எனவே, அவர்களுக்கு மனவளம் மற்றும் சத்துள்ள உணவையும் வழங்க வேண்டும். சமூக சேவகர்கள், ஆலோசகர்கள், சமூக அமைப்பினரின் பங்களிப்பு ஆகியவை மூலம் சமூகத்துடன் ஈடுபாட்டை உருவாக்கலாம்.

* காலையில் சத்தான உணவுக்குப் பின் மாணவர்கள் படிக்கும்போது. ஆக்கபூர்வமாகச் செயல்பட முடியும். பாடங்களில் அதிக ஆர்வமும் ஏற்படும். எனவே, மதிய உணவுடன் மாணவர்களுக்கு எளிமையான, புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய சத்தான காலை உணவு வழங்கப்பட வேண்டும்.

* சூடான காலை உணவு வழங்க முடியாத இடங்களில் எளிதான, சத்து மிகுந்த நிலக்கடலைகள், கடலை மிட்டாய் வழங்கலாம். உள்ளூரில் கிடைக்கும் பழங்களும் வழங்கப்பட வேண்டும்.

* அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களுக்கு உடல் பரிசோதனை நடத்த வேண்டும்.

* 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும், கட்டாயம் அங்கன்வாடி, பால்வாடிகளில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு ஆற்றல், உணர்வு, உளவியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், விளையாட்டுடன் கூடிய கல்வி விளையாட்டுடன் கூடிய கல்வி கற்பிக்கப்படும். இதனால் அவர்களின் அறிவாற்றல், திறன், உளவியல் வளர்ச்சி அடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H