ஓசூர்; வாலிபரிடம், 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கர்னுாரைச் சேர்ந்தவர், ராமையா, 53. அனுசோனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர். இவர், ஏப்ரல் மாதம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மகன் கிஷோர்குமார், 25; இவர், தந்தையின் பண பலன்களை பெற, கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பாலாஜி, 50, என்பவரை தொடர்பு கொண்டார். அவர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.கிஷோர்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட
அலுவலகத்தில், கூடுதல் பொறுப்பாக, நேற்று பணியாற்றி வந்த பாலாஜியிடம்,
5,000 ரூபாயை கிஷோர்குமார் வழங்கினார்.அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச
ஒழிப்பு, டி.எஸ்.பி., கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீசார், பாலாஜியை கைது
செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கர்னுாரைச் சேர்ந்தவர், ராமையா, 53. அனுசோனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர். இவர், ஏப்ரல் மாதம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மகன் கிஷோர்குமார், 25; இவர், தந்தையின் பண பலன்களை பெற, கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பாலாஜி, 50, என்பவரை தொடர்பு கொண்டார். அவர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.கிஷோர்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...