
மத்திய அரசு துறைகளில்
உள்ள பல்வேறு அதிகாரிகள் பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்
தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நியமனம் செய்கிறது. அந்த
வகையில், கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் அதிகாரிகள்
பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்பட்டது. கடந்த
ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்பட 829 இடங்களுக்கு
சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் வெற்றி
பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நேர்காணல் நடைபெற்றது. இதன்
முடிவுகளை யு.பி.எஸ்.சி நேற்று வெளியிட்டது.

இந்த
தேர்வில் தமிழகத்தில் இருந்து பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில்,
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சின்னி ஜெயந்த்தின்
மகனும் தேர்ச்சி பெற்றுள்ளார். சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருஜன் ஜெய்,
ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில் 75-வது ரேங்க் பெற்று தேர்ச்சி
பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிய முதல் முயற்சியிலேயே அவர் தேர்ச்சி
பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.