10 ஆண்டாக அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12000 பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


10 ஆண்டாக அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12000 பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்:


10 ஆண்டாக அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில்  பணிபுரியும் 12000 பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

தமிழகஅரசுக்கு தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை:

இது குறித்து  மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது :-

 முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா அவர்கள் 2012 ஆம் ஆண்டு 16549 பகுதிநேர ஆசிரியர்களை  ரூபாய் 5000 தொகுப்பூதியத்தில் நியமித்தார்.

இதில் தற்போது 4000 பேர் வேலையில் இல்லை. 

12000 பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிகின்றார்கள்.

10 ஆண்டுகள் ஆகும் போதும் இன்னும்  பணிநிரந்தரம் செய்யாமல் இருப்பதால்  ரூபாய் 7700 சம்பளத்தில் சிரமப்படுகின்றார்கள்.

இவர்களில் பெரும்பாலும் ஏழை விவசாய குடும்பத்தினர். முதல் தலைமுறை பட்டதாரிகள். பொருளாதாரத்தில்  பின்தங்கிய மக்களாவர். இதில் 200 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.  இவர்களை முன்னேற்ற வேண்டியது அரசின் கடமையாகும். 

16500 துப்புரவு பணியாளர்கள் அதிகபட்சமாக 3 ஆண்டு பணி முடித்தவர்கள் ஊரக வளர்ச்சி துறையில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர்.

எங்களுக்கு பின்னர் பணியில் அமர்த்தப்பட்ட 5000 துப்புரவு பணியாளர்கள் மற்றும் இரவு காவலர்கள் பள்ளிக்கல்வி துறையில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர்.

மேலும், சிறப்பு இளைஞர் படையினர் காவல்துறையில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர்

ஆனால் 2017ஆம் ஆண்டு சட்டசபையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள், இதற்காக 3 மாதங்களில் கமிட்டி அமைக்கப்படும் என்ற பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் அறிவிப்பு 4 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

எனவே அதிமுக ஆட்சி காலத்திலேயே சட்டசபை அறிவிப்பை நடைமுறைபடுத்தி தற்போது பணிபுரியும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றார். 

மேலும் நடைபெற இருக்கும் சட்டசபை தொடரில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்திட கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் என கேட்டு கொண்டார்.

தொடர்புக்கு:-
சி.செந்தில்குமார் 
மாநில ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு  செல் : 9487257203

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H