ஆந்திரா - தமிழக எல்லையிலுள்ள கோனேட்டம்பேட்டை என்ற கிராமம்தான் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் தாயார் பிறந்த ஊர். , திருவள்ளுர் மாவட்டதில் பள்ளிபட்டு கிராமத்தில் தன் தாத்தா வீட்டில் எஸ்.பி.பி. பிறந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தந்தை எஸ்-பி. சாம்பமூர்த்தி ஹரிகதா கலைஞர் என்பதால் நாடகத் நடிப்பதற்காக ஊருக்கு ஊர் இடம் பெயர்ந்து கொண்டே இருப்பார். இதனால், மனைவி கர்ப்பமானதையடுத்து கோனேட்டம்பேட்டை கோனேட்டம்பேட்டை கிராமத்திலுள்ள பெற்றோர் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.
அப்போதுதான், இந்த கிராமத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பிறந்துள்ளார். இந்த கிராமத்தில்தான் 6 வருடம் வரை எஸ்.பி.பி. வளர்ந்தார். திரையுலகில் வளர்ந்து பெரிய பாடகரான பிறகும் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த கிராமத்துக்கு விசிட் அடிப்பதை எஸ்.பி. பாலசுப்ரமணியம் வழக்கமாக கொண்டிருந்தார். இந்த கிராமத்தில் பள்ளிகளை கட்டியுள்ளதோடு, கழிவறை உள்ளிட்ட சுகாதாரப்பணிகளையும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மேற்கொண்டிருந்தார்.
ஊருக்கு வரும் போதெல்லாம் கோயில், ஊரில் உள்ள குளம்... அவ்வளவு ஏன்... தான் சிறுவயதாக இருந்த போது, விளையாடிய ஆலமரத்தையும் மெனக்கெட்டு சென்று பார்த்து பழைய நினைவுகளில் மூழ்குவதை எஸ்.பி.பி. வழக்கமாகக் கொண்டிருந்தார். தன் பால்ய கால நண்பர்களை கூப்பிட்டு பேசுவார். தேவைப்பட்ட உதவிகளையும் செய்வார் என்று அவருக்கு நெருக்கமான நண்பரான ராஜேந்திர பிரசாத் என்பவர் சொல்கிறார். கடந்த 2004 - ஆம் ஆண்டு ராஜேந்திர பிரசாத்தின் தந்தை இறந்த போது கோனேட்டம்பேட்டை கிராமத்துக்கு வந்த எஸ்-பி. பாலசுப்ரமணியம் இறுதி மரியாதை செலுத்தி சென்றுள்ளார்.
நெல்லூரில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன் தந்தைக்கு சிலை அமைத்தார். அப்போது, கோனேட்டம்பேட்டை கிராம மக்களை தனி வாகனத்தில நெல்லூருக்கு அழைத்து சென்று சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க வைத்து அன்பு காட்டினார். இந்த கிராமத்திலுள்ள சிறிய விநாயகர் கோயிலில்தான் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பெற்றோர் திருமணம் நடைபெற்றது. இந்த கோயில் தற்போது வரை எஸ்.பி பாலசுப்ரமணியம் குடும்பத்தினர்தான் பராமரித்து வருகின்றனர்.
நெற்குன்றம் அருகே கொனாட்டம்பேட்டை கிராம மக்கள் கோயில் ஒன்றை கட்டிய போது, பூமி பூஜையில் எஸ்.பி. பி பங்கேற்றார். கடந்த 2018 - ஆம் ஆண்டு எஸ்.பி. பி கடைசியாக கோனேட்டம்பேட்டை கிராமத்துக்கு சென்றார். அப்போது, கிராமத்தின் குடிநீர் தொட்டி அமைத்து ஊருக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தார் எஸ்.பி.பி.
வாழ்க்கையில் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் பிறந்த ஊரையும் வளர்ந்த ஊரையும் மறக்க கூடாது என்று அடிக்கடி எஸ்.பி.பி. சொல்வது உண்டு. சொன்னது போல வாழ்ந்தும் காட்டினார் பாடும் நிலா.
இப்போது, எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவால் கலங்கி நிற்கிறது கோனேட்டம்பேட்டை கிராமம்!
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...