மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 47 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருதைக் குடியரசுத் தலைவர் காணொலி மூலம் வழங்கினார். கரோனா பரவல் காரணமாக, ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் ஆட்சியர் முன்னிலையில் விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் மாவட்டம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலீப் மற்றும் சென்னை, அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவருக்கும் தனித்தனியே விருதுகள் வழங்கப்பட்டன.
விருது பெற்றது குறித்து ஆசிரியர் திலீப் கூறும்போது, ''ஆசிரியர் தினமான இன்று (செப்.5) விருதைப் பெறுவதற்காக டெல்லியில் இருந்து முன்னதாகவே விருது கூரியர் செய்யப்பட்டது. இந்த நல்லாசிரியர் விருதைக் காணொலிக் காட்சி வழியே குடியரசுத் தலைவர் வழங்கினார். நாட்டின் முதல் குடிமகன் கையால் விருதை வாங்க முடியவில்லை என்று சற்றே வருத்தமாக இருந்தது.
SOURCE www.hindutamil.in








