மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை (NEP 2020) தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்றுகாயிதே மில்லத் கல்வி மற்றும்சமூக அறக்கட்டளை வலியுறுத்திஉள்ளது.
இதுகுறித்து, அறக்கட்டளையின் பொதுச் செயலாளரும் காயிதே மில்லத்தின் பேரனுமான எம்.ஜி.தாவூத் மியாகான், முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பிஉள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:
புதிய கல்விக் கொள்கை நாட்டின் அடிப்படைக் கொள்கைக்குமட்டுமின்றி, ஜனநாயகத்துக்கும், சமூக நீதிக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரானதாகும்.
இது இந்திய சமூக கட்டமைப்பையே மாற்றக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் 150-க்கும் மேலான பிரிவுகள் மீறப்பட்டுள்ளன.
புதிய கல்விக் கொள்கையில் மாநில உரிமைகள், இட ஒதுக்கீடு, மொழிக் கொள்கை என அனைத்தும் மீறப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கி வழிநடத்திய தங்கள் இயக்கம் இச்சட்டத்தை முறியடிக்கும் வகையில் முன்னின்று செயல்பட வேண்டும்.
மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் அமைத்துதமிழ் மட்டுமின்றி பல்வேறு துறைகளை வளர்த்து உலகுக்கே போதித்த தமிழரும், தமிழ் மொழியும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டம் 2023-ன் நோக்கங்களுக்கும் முரணாக உள்ளது.
எனவே இப்புதிய கல்விக்கொள்கையை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...