பழங்காலத்தில் நம் முன்னோர்கள் இரவில் தூங்கும் முன் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இதற்கு காரணம் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதற்காகத் தான். சுத்தமான மலைத் தேனில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இதனால் தான் இயற்கை வைத்தியங்களில் தேன் முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமாக உள்ளது மற்றும் காயங்களை சரிசெய்யும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அடங்கியுள்ளன.
முக்கியமாக தேன் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றதும் கூட. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். மேலும் தேன் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுவிக்கும். இத்தகைய தேனை ஒருவர் இரவில் தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா? இக்கட்டுரையில் இரவு தூங்கும் முன்பு ஒரு ஸ்பூன் தேனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, தினமும் தேனை சாப்பிட்டு வாருங்கள்.
இரத்தஅழுத்தம்குறையும்
ஒருவர் தினமும் ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உட்பொருட்கள், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக மனிதன் மற்றும் எலி கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது. எனவே உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் ஒரு டீஸ்பூன் தேனை தவறாமல் சாப்பிட்டு வாருங்கள்.
எடைகுறையஉதவும்
தேன் கல்லீரலுக்கு எரிப்பொருள் போன்று செயல்படும் மற்றும் கல்லீரலில் க்ளூக்கோஸ் உற்பத்திக்கு உதவும். ஒருவர் இரவில் தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டால், உடல் கொழுப்புக்களை இரவு நேரத்தில் சற்று அதிகமாக எரிக்க ஆரம்பிக்கும். 1 கப் பச்சைத் தேனில் 64 கலாரிகள் உள்ளன மற்றும் இதை சாப்பிட்டல், இரவு நேரத்தில் பசி எடுக்காமலும் இருக்கும்.
வறட்டுஇருமல்மருந்து
தேன் சளி மற்றும் இருமலை சரிசெய்ய உவும். அதுவும் தேன் இரவு நேரத்தில் சந்திக்கும் வறட்டு இருமலில் இருந்து விடுவிக்கும் என்பது தெரியுமா? அதிலும் ஒருவர் இரவு தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் 2 டீஸ்பூன் தேனை சாப்பிட்டால், அது வறட்சி இருமலில் இருந்து விடுவிக்கும்.
ஆரோக்கியமானகல்லீரல்
கல்லீரல் இரவு நேரத்தில் செயல்படுவதற்கு போதுமான எரிப்பொருள் தேவை. இந்த எரிப்பொருள் தேனில் இருந்து அதிகம் கிடைக்கும். ஏனெனில், தேன் கல்லீரலில் க்ளுக்கோஸை உற்பத்தி செய்யச் செய்து, கொழுப்பைக் கரைக்கும் பல ஹார்மோனின் வெளியீட்டிற்கு உதவும். மேலும் தேனில் புருக்டோஸ் மற்றும் க்ளுக்கோஸ் போன்ற இரவு நேரத்தில் கல்லீரலின் செயல்பாட்டிற்குத் தேவையானவை உள்ளன.
உடல்பருமன்
உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் ஒரு டீஸ்பூன் தேனை இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் இது வயிற்றில் உள்ள கொழுப்புக்களை முற்றிலும் கரைத்து, கொழுப்பை உட்கொள்ளும் அளவைக் குறைக்கும். அதிலும் வெதுவெதுப்பான நீரால் தயாரிக்கப்பட்ட எலுமிச்சை ஜூஸ் வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்க உதவும்.
செரிமானத்தைமேம்படுத்தும்
தேனை வெதுவெதுப்பான நீருன் சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் குடித்தால், அது செரிமான மண்டலத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற உதவும் பாதுகாப்பான வழிகளுள் ஒன்றாகும். மலைத் தேனில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அழிக்க உதவும். ஆகவே உங்கள் செரிமானம் சிறப்பாக நடைபெற வேண்டுமேன ஆசைப்பட்டால், தினமும் ஒரு ஸ்பூன் தேனை சாப்பிடுங்கள்.
நோயெதிர்ப்புமண்டலம் வலிமையடையும்
தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும். இதனால் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் பல்வேறு நோய்களின் தாக்குதல் தடுக்கப்படும். மேலும் தேனில் உள்ள பாலிபீனால் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதயம் சம்பந்தப்பட் நோய்கள் மற்றும் புற்றுநோயையும் தடுக்கும்.
கொலஸ்ட்ரால்மேம்படும்
தேன் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்றதும் அச்சம் கொள்ள வேண்டாம். தேன் நம் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே உங்கள் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க வேண்டுமானால், தேனை தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிடுங்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...